தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

26.3.11

புகைப்பட வாக்காளர் அட்டையில் சிறு தவறுகள்:ஓட்டு போட அனுமதிக்க தேர்தல் கமிஷன் உத்தரவு

நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில், ஓட்டு போட வருபவர்களின் வாக்காளர் அடையாள அட்டையில் சிறு தவறுகள் இருந்தால், அவற்றை பொருட்படுத்தாமல் வாக்காளர்களை ஓட்டு போட அனுமதிக்கலாம் என்று, தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

ஓட்டு போடுவதற்கு வாக்காளர் அடையாள அட்டை அவசியம் என்று தேர்தல் கமிஷன் வலியுறுத்தியுள்ளது. இதை கருத்தில் கொண்டு, பெரும்பாலான வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை தேர்தல் கமிஷன் வழங்கியுள்ளது. இருப்பினும், வாக்காளர் அடையாள அட்டையில் பெயர், விலாசம், வயது உள்ளிட்ட விஷயங்களில் சிறு தவறுகள் உள்ளன.

இவ்வாறு தவறு உள்ள, வாக்காளர் அடையாள அட்டைகளை வைத்திருப்பவர்கள் ஓட்டளிப்பதில் மிகவும் சிக்கல் ஏற்படுகிறது. தவறு உள்ள வாக்காளர் அடையாள அட்டைகளை வைத்திருப்பவர்கள் ஓட்டளிக்க, ஓட்டு மையத்தில் பணிபுரியும் அதிகாரிகள் அனுமதிப்பதில்லை. இதனால், பலர் ஓட்டளிக்க முடியாமல் போகிறது. இதை கருத்தில் கொண்டு தேர்தல் கமிஷன் ஒரு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. இதன்படி, சிறு தவறுகள் உள்ள வாக்காளர் அடையாள அட்டைகளை வைத்திருப்பவர்கள் இம்முறை ஓட்டளிக்க முடியும்.

இது குறித்து தேர்தல் கமிஷன் அளித்துள்ள விளக்கம்:

தமிழகத்தில் உள்ள, 234 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 13ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள், தேர்தல் கமிஷனால் அளிக்கப்பட்டுள்ள வாக்காளர் அடையாள அட்டையை ஓட்டளிக்க வரும் போது, ஓட்டுச்சாவடியில் உள்ள அதிகாரியிடம் காண்பித்துவிட்டு ஓட்டளிக்க வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட வேறு ஆவணங்களை காட்டியும் ஓட்டளிக்கலாம்.

எந்தெந்த ஆவணங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து, ஓட்டுச்சாவடியில் உள்ள தேர்தல் அதிகாரிகளுக்கு ஏற்கனவே முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டையில் சிறு தவறுகள் உள்ளன என்று கூறி, வாக்காளர்களுக்கு ஓட்டளிக்கும் உரிமையை தேர்தல் அதிகாரிகள் மறுக்கக் கூடாது. சிறு தவறுகளை பொருட்படுத்தாமல் வாக்காளர்களை ஓட்டு போட அனுமதிக்கலாம் என்று தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக மாநில அரசின் இதழிலும் வெளி வந்துள்ளது.

இந்த செய்தி பொதுமக்கள் மற்றும் வாக்காளர்களின் கவனத்திற்கு செல்லும் வகையில் பத்திரிகையிலும், தொலைக்காட்சியிலும் வெளிவர வேண்டும். மேலும், தொகுதியில் போட்டியிடும் எல்லா வேட்பாளர்களுக்கு இது குறித்து கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும்.


தேர்தலின் போது, தேவைப்படும் பாதுகாப்புக்கு, ஊர்காவல் படை, வனக்காவலர்கள், ஓய்வு பெற்ற தீயணைப்புப் படை வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், ஓய்வு பெற்ற போலீசார் போன்றவர்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

நன்றி

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்