தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

26.3.11

பேரவைத் தேர்தலில் வாக்களிக்க அடையாள அட்டை, வாக்குச்சாவடி சீட்டு மட்டுமே செல்லும்: பிரவீண் குமார் அறிவிப்பு

வாக்காளர் பட்டியலில் புகைப்படத்துடன் பெயர் இடம் பெற்றிருந்தால், அவர்கள் வாக்காளர் அடையாள அட்டை அல்லது புகைப்படத்துடன் கூடிய வாக்குச் சாவடி சீட்டுகளை மட்டுமே வைத்து வாக்களிக்க முடியும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் குறுந்தகடுகள், துண்டுப் பிரசுரங்களை சென்னையில் வெள்ளிக்கிழமை பிரவீண் குமார் வெளியிட்டார். இதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:  

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் வாக்களிக்க புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகள் 99.9 சதவீதம் பேருக்கு அளிக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி சீட்டுகளும் கொடுக்கப்பட உள்ளன. சென்னையில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அவை அளிக்கப்படுகின்றன.  

வாக்குப் பதிவுக்கு 10 நாள்களுக்கு முன்பே வாக்குச் சாவடி சீட்டுகளை அளிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  

பட்டியலில் பெயர் அவசியம்: தேர்தலில் வாக்களிக்கும் ஆவணங்களாக புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை, வாக்குச் சாவடி சீட்டு ஆகிய இரண்டில் ஒன்று மட்டுமே ஆவணமாக எடுத்துக் கொள்ளப்படும்.  தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், மதுரை ஆகிய நகரங்களில் உள்ள சுமார் 60 ஆயிரம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் இதுவரை வழங்கப்படவில்லை.  அவர்களின் பெயர், முகவரி ஆகியன வாக்காளர் பட்டியலில் புகைப்படம் இல்லாமல் இருக்கும்பட்சத்தில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 13 ஆவணங்களைக் கொண்டு அவர்கள் தங்களது வாக்குகளைச் செலுத்தலாம்.  

 51 ஆயிரம் அதிகாரிகள்: வாக்குச் சாவடி சீட்டுகளை அளிக்கும் பணியில், வாக்குச் சாவடி அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுவர். தமிழகத்தில் மொத்தம் 54 ஆயிரம் வாக்குச் சாவடிகள்  உள்ளன.  இந்த வாக்குச் சாவடிகளில் 51 ஆயிரம் வாக்குச் சாவடி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மூலமாக வாக்குச் சாவடி சீட்டுகள் அளிக்கப்படவுள்ளன என்றார் பிரவீண் குமார்.

நன்றி



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்