ஓட்டளிக்க விரும்பாதவர்கள் 49"ஓ' படிவத்தை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என, தேர்தல்  கமிஷன் தெரிவித்துள்ளது.மேலும் அதை பயன்படுத்துவதில், புதிய நடைமுறையை  கடைபிடிக்கவும்  உத்தரவிட்டுள்ளது.
 100 சதவீத ஓட்டுப்பதிவை உறுதி செய்ய  தேர்தல் கமிஷன் தீவிரம் காட்டி வருகிறது.  அதே நேரம் ஓட்டு வீணாகாமல்  தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  ஓட்டளிக்க விரும்பாத நிலையை  தெரிவிக்கும் 49'ஓ படிவம் பயன்படுத்துவதை வாக்காளர்கள் தவிர்க்க வேண்டும்  என தெரிவித்துள்ளது. ஓட்டளிக்க விரும்பாதது வாக்காளர்களின் உரிமை  என்றாலும், இந்த எண்ணிக்கை எதிர்காலத்தில் அதிகரித்து விடக்கூடாது என்பதில்  கமிஷன் கவனமாக உள்ளது. 
தற்போது 49'ஓ படிவ நடைமுறையில் சில மாற்றங்கள்  செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன் ஓட்டுச்சாவடியில் அந்த படிவத்தை கையெழுத்து  மட்டும் வாங்கிக்கொண்டு வழங்குவர்.  அதில் காரணத்தை தெரிவிக்க வேண்டும்.  அந்த படிவம் தனியாக கவரில் போடப்பட்டு பராமரிக்கப்படும். அது போன்று எத்தனை  படிவங்கள் வந்துள்ளன என்ற எண்ணிக்கை மட்டும் கணக்கிடப்படும். படிவம் உள்ள  கவர் பிரிக்கப்பட மாட்டாது. 
தற்போது, இப்படிவத்தை பயன்படுத்துவோர் தங்களின்  முழு முகவரியுடன் அவர் சார்ந்த பகுதியின் பாகம் எண் முதற்கொண்டு, அனைத்து  விவரங்களையும் குறிப்பிட வேண்டும்.  இப்படிவத்தின் கவரை தேர்தல் கமிஷனால்  இதற்கென ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நியமிக்கப்பட உள்ள அதிகாரியிடம்  ஒப்படைக்க வேண்டும்.
தேர்தல் முடிவிற்கு பின் இந்த கவர்கள் பிரிக்கப்பட்டு  அதில் அந்த நபர் குறிப்பிட்டிருக்கும் காரணங்கள் சரிபார்க்கப்படும்.   அரசியல் காரணங்களைத் தவிர தேர்தல் கமிஷன் செயல்பாடுகளில் ஏதேனும்  குறைபாடுகள், எதிர்காலத்தில் செய்யப்பட வேண்டியது பற்றி  குறிப்பிட்டிருந்தால் அந்த நபரை நேரில் சந்தித்து கருத்துக்களை கேட்டு  பதிவு செய்து கமிஷனுக்கு அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 
நன்றி: 


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக