தேர்தல் பணியை உதாசீனப்படுத்தும் அரசு ஊழியர்கள்  மற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரியும்,  ஆட்சியருமான ராஜேந்திர ரத்னூ தெரிவித்துள்ளார். 
இது தொடர்பாக, வெள்ளிக்கிழமை அவர்  வெளியிட்ட செய்திக் குறிப்பு:  
தேர்தல் வாக்குச் சாவடிகளில் வாக்குச்சாவடி அலுவலர்களாகப் பணிபுரிய அரசு  ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால்  அனுப்பப்பட்டுள்ளது.   
தேர்தல் சம்பந்தமான பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சிபெற அவர்களுக்கு  அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குச் சாவடிகளில், வாக்குச் சாவடி அலுவலர்களாக நியமனம்  செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட ஆணையைப்  பெற்று ஒப்புதல் அளிப்பதுடன், தேர்தல் பயிற்சி வகுப்பிலும் கலந்துகொள்ள வேண்டும்.   
எனவே, இந்த ஆணையைப் பெற்றுக்கொள்ளாமல் உதாசீனப்படுத்தும் அரசு ஊழியர்கள்  மற்றும் ஆசிரியர்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 134-ன்கீழ்  நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆட்சியர்.
நன்றி:


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக