தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

26.3.11

தேர்தல் பணியை தவிர்த்தால் நடவடிக்கை: ஆட்சியர்

தேர்தல் பணியை உதாசீனப்படுத்தும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான ராஜேந்திர ரத்னூ தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக, வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:  
தேர்தல் வாக்குச் சாவடிகளில் வாக்குச்சாவடி அலுவலர்களாகப் பணிபுரிய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் அனுப்பப்பட்டுள்ளது.  

தேர்தல் சம்பந்தமான பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சிபெற அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குச் சாவடிகளில், வாக்குச் சாவடி அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட ஆணையைப் பெற்று ஒப்புதல் அளிப்பதுடன், தேர்தல் பயிற்சி வகுப்பிலும் கலந்துகொள்ள வேண்டும்.  

எனவே, இந்த ஆணையைப் பெற்றுக்கொள்ளாமல் உதாசீனப்படுத்தும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 134-ன்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆட்சியர்.

நன்றி:


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்