தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

11.3.11

தேர்தல் நாளில் தேர்வுகள்: தேதிகளை மாற்றம் செய்து கல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில் ஏப்., 13ல் சட்டசபை தேர்தல் நடப்பதால், அன்று நடக்கவிருந்த 6, 7, 8, 9ம் வகுப்பு தேர்வுகளின் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு தேர்வுகள், ஏப்.,11ல் துவங்கி 21ம் தேதி வரை நடைபெறும் என அட்டவணை வழங்கப்பட்டது. சட்டபை தேர்தலையொட்டி இந்த அட்டவணையில் மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

இதன்படி ஏப்.,6ல் தமிழ் முதல் தாள், 7ல் இரண்டாம் தாள், 9ல் சுற்றுச்சூழல் கல்வி, 15ல் ஆங்கிலம் முதல்தாள், 18ல் ஆங்கிலம் இரண்டாம் தாள், 19ல் கணிதம், 20ல் அறிவியல், 21ல் சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். 

இருப்பினும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்வு தேதிகளில் மாற்றம் செய்து கொள்ளலாம்.

நன்றி:



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்