தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

1.3.11

மக்கள் தொகை கணக்கெடுப்பு இறுதி கட்டம் : பள்ளிகள் மூடும் சூழ்நிலை

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு மார்ச் 1 முதல் 5ம் தேதி வரை விடுப்பு அறிவித்துள்ளதால், பல பள்ளிகள் மூடும் நிலையில் உள்ளன. 

தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு தற்போது நடந்து வருகிறது. பிப்., 9ம் தேதி துவங்கிய இப்பணி இன்றுடன் (பிப்., 28) முடிவடைகிறது. இன்று நள்ளிரவு வரை கணக்கெடுப்பாளர்கள், தெருவோரங்களில், நடைபாதைகளில் வசிப்போரை கணக்கெடுக்க வேண்டும். பின், மார்ச் 1 முதல் 5ம் தேதிக்குள் விடுபட்டவர்களையும் கண்டுபிடித்து சேர்த்து பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும். 

கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கு அரைநாள் "ஆன் டூட்டி' சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு ஆசிரியரோ, பிற ஊழியர்களோ தாங்கள் விரும்பும் நேரத்தில் கணக்கெடுப்பு பணியை பள்ளிப் பணிகள் பாதிக்காதவாறு நடத்தலாம். அதன்படியே நடந்தும் வருகிறது. 

இந்நிலையில், மார்ச் 1 முதல் 5ம் தேதி வரை உள்ள நாட்களை, கணக்கெடுப்பாளர்களுக்கு விடுப்பு நாளாக கருதும்படி உத்தரவிடப் பட்டுள்ளது. பெரும்பாலும் கணக்கெடுப்பில் பள்ளி ஆசிரியர்களே ஈடுபட்டுள்ளனர். சில பள்ளிகளில் உள்ள மொத்த ஆசிரியர்களில், மாற்றுத் திறனாளிகள் தவிர பெரும்பாலும் அனைவருக்குமே கணக்கெடுப்புப் பணி வழங்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளிகளையே மூடும் நிலை உள்ளது.


பிளஸ் 2 தேர்வுகள் நாளை மறுதினம் துவங்க உள்ள நிலையில், உயர்நிலை பள்ளிகளில், பத்தாம் வகுப்பு தேர்வுக்காக மும்முரமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பிற நடுநிலை, துவக்கப் பள்ளிகளிலும் இறுதிகட்ட நிலையில் உள்ளனர். இந்நிலையில், ஆசிரியர்களில் பெரும்பாலானோர் கணக்கெடுப்பு பணிக்காக செல்வதால், கணக்கெடுப்பில் அதிக ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளை மூடும் நிலை உள்ளது.

நன்றி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்