தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

29.3.11

புதிய பென்ஷன் மசோதா ரத்து செய்ய வலியுறுத்தல்

புதிய பென்ஷன் மசோதாவை ரத்து செய்ய, அரசு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. மத்திய அரசு, புதிய பென்ஷன் மசோதாவை தாக்கல் செய்துள்ளது. 

இதன்படி மத்திய அரசில் 1.1.2004 முதல் பணியில் சேர்ந்தவர்களுக்கும், தமிழகத்தில் 1.4.2003 முதல் அரசு பணியில் சேர்ந்து பணியாற்றும் ஊழியர்களுக்கும், இத்திட்டம் அமல் படுத்தப்படவுள்ளது. இதன்படி அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தில் 10 சதவீதமும், அரசு 10 சதவீதமும் செலுத்தும். ஓய்வு பெறும் போது எவ்வளவு பென்ஷன் வழங்கப்படும் என்பது வரையறுக்கப்படவில்லை.
 
பென்ஷன் தொகையை அரசு, பங்குச் சந்தையில் முதலீடு செய்யும். பங்குச் சந்தை நிலவரத்தை பொறுத்தே பென்ஷன் தொகை வழங்கப்படும் என, அரசு தெரிவிக்கிறது. பொது சேமநல நிதியில் இருந்து கடன் பெற முடியாத நிலை புதிய பென்ஷன் திட்டத்தில் உள்ளது. 

மேலும் இந்த மசோதாவில் மாநில அரசு விரும்பினால், 2003 க்கு முன்பு அரசு பணியில் இருக்கும் ஊழியர்களுக்கும் செயல்படுத்தலாம் என, தெரிவித்துள்ளது. இதனால், அனைத்து மத்திய அரசு, மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்த மசோதவை ரத்து செய்து அனைத்து அரசு ஊழியர்களும், பழைய பென்ஷன் திட்டத்தை அமல் படுத்த வேண்டும். இல்லை எனில் முதல் கட்டமாக 2 மணி நேரம் வெளி நடப்பு போராட்டம் மற்றும் அடுத்தக்கட்ட போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

நன்றி:


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்