தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

7.10.12

புதிய ஆசிரிய பணியிடங்களுக்கு சம்பளம் கூட்டமைப்பு கூட்டத்தில் வலியுறுத்தல்

புதிய ஆசிரிய பணியிடங்களுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாளையில் நடந்த ஆசிரியர், அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நெல்லை மாவட்ட உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர், அலுவலர் சங்கங்களின் மாவட்ட கூட்டம் பாளையில் நடந்தது. மாவட்ட அமைப்பாளர் மனோகரன் தலைமை வகித்தார். இணை அமைப்பாளர் பஸ்லுல்ஹக் முன்னிலை வகித்தார். பட்டதாரி ஆசிரியர் கழக இணை செயலாளர் சுரேஷ் வரவேற்றார்.இதில் வட்டார வள மைய ஆசிரிய பயிற்றுனர்கள் சார்பில் விக்டர் ஜான்சன், தமிழக தமிழாசிரியர் கழகம் சார்பில் பாஸ்கர், பொற்செழியன், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் சத்திய நாராயணன், மூக்கையா, பஞ்சராஜ், கார்த்திகேயன், சுந்தர குமார், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பில் ராஜமார்த்தாண்டன், சரவணன், ஜோசப் ராஜாசிங், ரைமண்ட், முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆசீர் சார்லஸ் நீல் உட்பட பலர் பேசினர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9ம் தேதி சேரன்மகாதேவி கல்வி மாவட்ட அலுவலகம் முன்பு நடக்கும் முற்றுகை போராட்டத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொள்ள வேண்டும். இதுவரை சம்பளம் வழங்கப்படாத புதிய ஆசிரியர் பணியிடங்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கம் ஆகியவற்றில் நடந்த முறைகேடுகளை விசாரிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆசிரியர், அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட பொருளாளர் இசக்கியப்பன் நன்றி கூறினார்.

நன்றி:

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்