தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

23.10.12

ஊதிய முரண்பாடுகள் களைதல் குழுவின் பதவிக்காலம் 31-10-2012 வரை நீட்டிப்பு

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட குழுவின் பதவிக்காலம் 31-10-2012 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கும் என்று  எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது ஆசிரியர், அரசு ஊழியர், மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு 6வது ஊதியக்குழு 1.1.2006 முதல் அமல்படுத்தப்பட்டது. இதில் ஏற்பட்ட ஊதிய முரண்பாடுகளை களைவதற்கு ஒரு நபர் கமிட்டி அமைக்கப்பட்டது. இக்கமிட்டி மூலம் ஒரு சில முரண்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டாலும் பல முரண்பாடுகள் தீர்க்கப்படாமல் இருந்து வந்தன.

இந்த முரண்பாடுகளை களைவதற்காக அரசு செயலாளர் (செலவுகள்) கிருஷ்ணன் தலைமையில் உறுப்பினர்கள் அரசு கூடுதல் செயலாளர் (நிதித்துறை) பத்மநாபன், இணை செயலாளர் (நிதித்துறை) உமாநாத் ஆகியோர் அடங்கிய மூன்று நபர் குழுவை தமிழக அரசு அமைத்தது.

இந்தக் குழு ஆசிரியர் சங்கங்கள், அரசு ஊழியர் சங்கங்களிடம் ஊதிய முரண்பாடு தொடர்பான கோரிக்கைகளை பெற்றது. இக்குழுவின் பதவிக் காலம் 3 மாதம் முடிவடைந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் உறுப்பினர் பத்மநாபன் ஓய்வு பெற்றதால் அரசு கூடுதல் செயலாளர் (நிதி) சாந்தி உறுப்பினராக நியமிக்கப்பட்டார். குழுவின் பதவிக்காலமும் மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் ஜூலை 9, 10, 11 மற்றும் 16ஆகிய தேதிகளில் ஊதிய முரண்பாடு தொடர்பாக அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள், தனி நபர்களிடம் குழு ஆலோசனை நடத்தியது.

இந்தக் குழுவின் பதவிக்காலம் அக்டோபர் 8ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் தற்போது குழுவின் பதவிக்காலத்தை 31-10-2012 வரை நீட்டிப்பு செய்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது.


அரசாணை எண்: 376 நாள்: 19-10-2012
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்