தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

7.10.12

ஓய்வூதிய திட்டத்தில் அன்னிய முதலீடு அதிகரிப்பு: மக்களை ஏமாற்றும் நடவடிக்கை என ஜெ., பாய்ச்சல்

"காப்பீடு, ஓய்வூதியத் திட்டத்தில் அன்னிய முதலீட்டை அதிகரிப்பது, மக்களை ஏமாற்றும் நடவடிக்கை' என்று, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில், முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து, முதல்வர் எழுதியுள்ள கடித விவரம்:
பொதுமக்கள், சிறு வியாபாரிகள் மற்றும் சிறு விவசாயிகளின் வேதனைகளைப் பற்றி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, கவலைப்படாமல் உள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மீது, வெளியாகி வரும், மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டுக்களை, மக்கள் மறக்க வேண்டும் என்பதற்காக, நேரடி அன்னிய முதலீடு விவகாரம் கையில் எடுக்கப்பட்டுள்ளது. காப்பீட்டுத் துறையில், நேரடி அன்னிய முதலீட்டை, 26லிருந்து, 49 சதவீதமாக உயர்த்தவும், ஓய்வூதியத் திட்டத்தில், அன்னிய முதலீட்டுத் திட்டத்திற்கு, 26 சதவீதம் வரையில் இடம் அளிக்கவும், மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இது தெடர்பாக, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய மசோதா மற்றும் காப்பீட்டுத் திட்ட மசோதா ஆகியவற்றை, பார்லிமென்ட்டின், இரண்டு அவைகளிலும் நிறைவேற்ற வேண்டும். ஆனால், நிறைவேற்றத் தேவையான அளவிற்கு, எம்.பி.,க்கள், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு இல்லை.காப்பீட்டுத் துறையில், ஏற்கனவே, 26 சதவீத அன்னிய முதலீடு அனுமதிக்கப்பட்டிருந்தாலும், குறிப்பிடத்தக்க எந்த முதலீடும் இதுவரை வரவில்லை.காப்பீட்டு நிறுவனங்கள், 50 கோடி ரூபாய் முதலீட்டைக் கொண்டிருந்தால் போதுமானது என்று கூறப்பட்டுள்ள விதியானது, இந்த துறையில் அனுபவமும், ஆற்றலும் இல்லாத, சிறு சிறு நிறுவனங்களை, காளான்களைப் போல முளைக்கச் செய்யும்; இது மிகவும் அபாயகரமானது.

இது, மக்களின் எதிர்காலத்தை பாதித்துவிடும். அதே நேரத்தில், எல்.ஐ.சி., போன்ற பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களின் வளர்ச்சி பாதிக்கப்படும். இதன் மூலம், நாட்டின் வளர்ச்சியும் குறையும்.மத்திய அரசின் இந்த நடவடிக்கை மிகவும் வணிகத் தந்திரம் மிக்கது; மோசமானது என்பதுடன் அவசியமும் இல்லாதது. மோசமான நடவடிக்கைகளை, சீர்திருத்தம் என்ற அடிப்படையில் நடைமுறைப்படுத்த நினைப்பது, மக்களை ஏமாற்றுவதாகும். பொதுமக்களின் எதிர்காலத்திற்கு,பேராபத்து விளைவிக்கும் இந்த நடவடிக்கைகளை, நான் வன்மையாக எதிர்க்கிறேன்.

இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்