தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

19.10.12

மழை காலங்களில் பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பதில் தொடருது குழப்பம் : சிறுவர், சிறுமியர் அவதியோ அவதி

மழை காலங்களில், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பதில் குழப்பமான நடைமுறை பின்பற்றப்படுவதால், மாணவர்கள் அவதிக்கு உள்ளாகின்றனர். வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில், நேற்று முன்தினம் முதல், மழை பெய்து வருகிறது. இதர மாவட்டங்களிலும், கடந்த இரு நாட்களாக மழை வலுத்துள்ளது.

பெரும் குழப்பம்: தொடர்மழை காலங்களில், மாணவர்கள் பள்ளிக்கு வருவது பாதுகாப்பானதாக இல்லை என்பதால், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு வருகிறது. ஆனால், சமீப காலமாக, மழை காலங்களில், பள்ளிக்கு விடுமுறை விடுவது குறித்து முடிவெடுப்பதில், அதிகாரிகள் மத்தியில், பெரும் குழப்பம்
ஏற்படுகிறது. தொடர் மழையையும் பொருட்படுத்தாமல், மாணவர்கள் பள்ளிக்கு வந்த பின், அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. பெரும்பாலான நேரங்களில், பலத்த மழையின் போது பள்ளி இயங்குவதும், விடுமுறை அறிவிக்கப்பட்ட நாளில், மழை ஓய்ந்திருப்பதும் தொடர்கிறது. பள்ளி விடுமுறை தொடர்பான அறிவிப்பு, முதற்கட்டமாக, "டிவி' மற்றும் இணையத்தில் வெளியாகும் என்பதால், காலையில் பள்ளிக்கு கிளம்பும் முன், அனைத்து, "சேனல்'களையும், "செக்' செய்துவிட்டு, பெற்றோர் தங்கள் குழந்தைகளை, பள்ளிக்கு அனுப்புவதும் தொடர்கிறது.

"லீவு விட்டா, மழை நின்னுடும்': சென்னையில் நேற்று மழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதற்கேற்ப, நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று காலை வரை, மழை, விட்டுவிட்டு பெய்தது. இதனால், சாலையெங்கும் வெள்ளம் தேங்கி, போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு இருந்தது.
வழக்கம் போல், பள்ளிக்கு விடுமுறை விடப்படுமா என்று எதிர்பார்த்து, எவ்வித அறிவிப்பும் வராததால், பிள்ளைகளை, பெற்றோர் பள்ளிக்கு அனுப்பினர். ஆனால், பள்ளிக்கு சென்ற பின், காலை, 9:30 மணியளவில், மழை காரணமாக, பள்ளிகளுக்கு விடுமுறை என, சென்னை மாவட்ட கலெக்டர் அறிவித்தார்.

இதனால், பள்ளி நிர்வாகத்தினரும் குழப்பமடைந்தனர். பெரும்பாலான மாணவர்கள், ஆட்டோ, வேன் போன்ற வாகனங்கள் மூலம் பள்ளிக்கு வருகின்றனர். பணிக்கு செல்லும் பெற்றோர், பள்ளிகளில் குழந்தைகளை விட்டுச் செல்லும் நடைமுறையும் உண்டு. இதில் குளறுபடிகள் ஏற்பட்டன. இதனால், குழந்தைகள், பள்ளி வளாகத்தில், பரிதாபமாக காத்திருக்க வேண்டியுள்ளது. வடகிழக்கு பருவமழை பெய்யும் காலம் வந்ததால், இப்பிரச்னைக்கு நிரந்தர அணுகுமுறை தேவைப்படுகிறது.

குழப்பம் ஏன்?: இந்த குழப்பத்திற்கு காரணம் குறித்து, கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தொடர் மழை காலங்களில், பள்ளிக்கு விடுமுறை விடுவதற்கான அதிகாரம், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வசம் இருந்து வந்தது. கல்வி மாவட்டங்களை சேர்ந்த அதிகாரிகளிடம், மழை நிலவரம் குறித்து, அவர்கள் கேட்டறிந்து, அதற்கேற்ப, உள்ளூர் விடுமுறையை அறிவித்து வந்தனர். விடுமுறையை ஈடுகட்ட, மாற்றாக, எப்போது பள்ளிகளை நடத்ததலாம் என்பதை, அந்தந்தப் பகுதிக்கு ஏற்ப அவர்கள், அறிவித்ததும் உண்டு.

கடந்த, தி.மு.க., ஆட்சியில், பள்ளிகளுக்கு விடுமுறை விடும் அதிகாரம், மாவட்ட கலெக்டர்களுக்கு மாற்றப்பட்டது. பல்வேறு பணிகளுக்கு இடையே, மாவட்ட கலெக்டர்கள் பள்ளிக்கு விடுமுறை விடுவது குறித்து, உடனடி முடிவெடுக்க முடியாததால் தான் இத்தகைய குழப்பம் ஏற்படுகிறது. சென்னை மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் இந்த குழப்பம் தொடர்கிறது. எனவே, முன்பு இருந்தது போல், விடுமுறை குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை, முதன்மை கல்வி அலுவலர் வசமே ஒப்படைத்தால், நிலைமைக்கேற்ப, அவர் முடிவெடுக்க வாய்ப்பு ஏற்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நன்றி:

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்