தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

2.10.12

நெல்லையில் அக்டோபர் 4ம் தேதி பள்ளிகள் திறப்பு

முதல் பருவ தேர்வு விடுமுறைக்கு பின்னர் 4ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் முதல் பருவ தேர்வு செப். 12ம் தேதி தொடங்கியது. 6 முதல் 10 வகுப்புகளுக்கு 20ம் தேதி தேர்வு முடிந்தது. பிளஸ் 2விற்கு 25ம்தேதி தேர்வு முடிந்தது. பெரும்பாலான பள்ளிகளில் தேர்வு முடிந்த பின்னரும் கூடுதலாக 2 நாள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டு வகுப்புகள் நடந்தன. முதல் முறையாக எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 காலாண்டு தேர்வுகள் பொது தேர்வாக நடத்தப்பட்டன.

இந்நிலையில் முதல் பருவ தேர்வு (காலாண்டு) முடிந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்தும் அக்.3ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே செப். 27, 28, 29 ஆகிய தேதிகளில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது. இதனால் அக்.4ம் தேதி பள்ளி திறக்கப்படும் என்று தகவல் பரவியதால் ஆசிரியர்கள் இடையே குழப்பம் நிலவியது.

இதையடுத்து நெல்லையில் நேற்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிரேஸி சுலோச்சனா ரத்னாவதி தலைமையில் பள்ளி திறக்கும் தேதியை முடிவு செய்வதற்காக தலைமை ஆசிரியர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் அக்.4ம் தேதி நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பெரும்பாலான மெட்ரிகுலேசன் பள்ளிகள் 3ம் தேதி திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நன்றி:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்