தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

12.10.12

ஊதிய முரண்பாடு களைதல் குழு அறிக்கை எப்போது?

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட குழுவின் பதவிக்காலம் முடிந்தது. இந்தக் குழு விரைவில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் எதிர்பார்க்கின்றன.

தமிழக அரசு ஊழியர்களுக்கு 6வது ஊதியக்குழு 1.1.2006 முதல் அமல்படுத்தப்பட்டது. இதில் ஏற்பட்ட ஊதிய முரண்பாடுகளை களைவதற்கு ஒரு நபர் கமிட்டி அமைக்கப்பட்டது. இக்கமிட்டி மூலம் ஒரு சில முரண்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டாலும் பல முரண்பாடுகள் தீர்க்கப்படாமல் இருந்து வந்தன.

இந்த முரண்பாடுகளை களைவதற்காக அரசு செயலாளர் (செலவுகள்) கிருஷ்ணன் தலைமையில் உறுப்பினர்கள் அரசு கூடுதல் செயலாளர் (நிதித்துறை) பத்மநாபன், இணை செயலாளர் (நிதித்துறை) உமாநாத் ஆகியோர் அடங்கிய மூன்று நபர் குழுவை தமிழக அரசு அமைத்தது.

இந்தக் குழு ஆசிரியர் சங்கங்கள், அரசு ஊழியர் சங்கங்களிடம் ஊதிய முரண்பாடு தொடர்பான கோரிக்கைகளை பெற்றது. இக்குழுவின் பதவிக் காலம் 3 மாதம் முடிவடைந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் உறுப்பினர் பத்மநாபன் ஓய்வு பெற்றதால் அரசு கூடுதல் செயலாளர் (நிதி) சாந்தி உறுப்பினராக நியமிக்கப்பட்டார். குழுவின் பதவிக்காலமும் மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் ஜூலை 9, 10, 11 ஆகிய தேதிகளில் ஊதிய முரண்பாடு தொடர்பாக 240க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள், தனி நபர்களிடம் குழு ஆலோசனை நடத்தியது. இதில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் பங்கேற்றன.

இந்த ஆலோசனையின் போது, இடைநிலை ஆசிரியர்களின் சாதாரண நிலை ஊதியம் 5200 - 20200, தர ஊதியம் 2800 என "பே பாண்ட் 1" ஆக உள்ளது. இதை "பே பாண்ட் 2" ஆக மாற்றி 9300 - 34,800 தர ஊதியம் 4,200 வழங்க வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்தக் குழுவின் பதவிக்காலம் கடந்த 9ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. எனவே மூவர் கமிட்டி உடனே அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அரசும் ஊதிய முரண்பாடுகளை களைந்து விரைந்து ஆணைகளை வெளியிட வேண்டுமென்று அரசு ஊழியர், ஆசிரியர்கள் சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

நன்றி:

 

2 கருத்துகள்:


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்