தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

28.4.12

TET வினா விடை - தமிழ் - பொது 3

* தமிழ்த் தென்றல் - திரு. வி. கல்யாண சுந்தரனார் (திரு.வி.க)

* பொதுமை வேட்டல் என்னும் நூலின் ஆசிரியர் - திரு.வி.க

* 'நாமக்கல் கவிஞர்' என அழைக்கப்படுபவர் - வெ.ராமலிங்கம்.

* நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது - பத்மபூஷன்

* குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது - சிலப்பதிகாரம்

* இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் - சிலப்பதிகாரம்

* தமிழ்மொழியின் முதல் காப்பியம் - சிலப்பதிகாரம்

* ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன - ஆறு காண்டங்களாக

* மாயணத்தில் "சொல்லின் செல்வர்" என அழைக்கப்பட்டவர் - அனுமன்

* ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் - சுந்தர காண்டம்

* இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் - அசோகவனம்

* சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு - கிட்கிந்தை

* சீதைக்குக் காவலிருந்த பெண் - திரிசடை

* கவிச் சக்கரவர்த்தி என அழைக்கப்படுபவர் - கம்பர்

* "கிறிஸ்துவக் கம்பன்" என அழைக்கப்படும் கவிஞர் - எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை

* இரட்சண்ய யாத்திரிகம் எனும் காப்பியத்தின் ஆசிரியர் - எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை

* இரட்சண்ய யாத்திரிகம் எந்த நூலின் வழி நூலாகும் - பில்கிரிம்ஸ் புரோகிரஸ் (ஆங்கிலம்)

* பில்கிரிம்ஸ் புரோகிரஸ் நூலின் ஆசிரியர் - ஜான் பன்யன்

* இரட்சண்ய யாத்திரிகம் என்பதன் பொருள் - ஆன்மஈடேற்றம்

* இரட்சண்ய யாத்திரிகம் எத்தனை பருவங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது - ஐந்து

* எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளையின் இயற்பெயர் - ஹென்றி ஆல்பர்ட்

* கம்பரை ஆதரித்த வள்ளல் - சடையப்ப வள்ளல்

* கம்பர் இயற்றிய மற்றொரு நூல் - சரசுவதி அந்தாதி

* வள்ளத் தோளின் பாடல்களை மொழி பெயர்த்திருக்கும் கவிஞர் - கவிஞர். துறைவன்

* "திருவினாள்" என சிறப்பிக்கப்படுபவர் - லட்சும் தேவி

* தொல்காப்பியர் கூறும் அகத்திணைகள் எத்தனை - ஏழு

* ஜடாயுவின் அண்ணன் - சம்பாதி

* "சாகித்திய மஞ்சரி" என்னும் நூலின் ஆசிரியர் - மலையாளக் கவிஞர் வள்ளத்தோள்

* திரிகடுகத்தில் இடம்பெறும் பாடல்கள் எத்தனை - 101 வெண்பாக்கள்

* திரிகடுகம் குறிப்பிடும் மருந்துப் பொருட்கள் - சுக்கு, மிளகு, திப்பிலி

* திரிகடுகம் என்னும் நூலின் ஆசிரியர் - நல்லாதனார்

* "ஆக்டியம்" என்ற சொல்லின் பொருள் - ஏளனம்

* நல்குரவு என்ற சொல்லின் பொருள் - வறுமை

* ஞாலம் என்ற சொல்லின் பொருள் - அறிவு

* வசை என்ற சொல்லின் பொருள் - பழி

* வெகுளி என்ற சொல்லின் பொருள் - கோபம் (அ) சினம்

* விளக்கிலிருந்து கிடைப்பது ஒளியா? ஒழியா? - ஒளி

* குறுந்தொகை என்னும் தொகை நூலின் பாடிய புலவர்கள் - 205 புலவர்கள்

* குறிஞ்சித் திணைப் பாடல் பாடுவதில் வல்லவர் - கபிலர்

* குறுந்தொகையில் இடம் பெற்ற பாடல்கள் எத்தனை - 402 பாடல்கள்

* புறநானூறு என்னும் நூலில் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் - ஜி.யூ.போப்

* புறநானூறு இடம் பெறும் தொகுப்பு - எட்டுத்தொகை

* சீத்தலைச் சாத்தனார் பாடல்கல் இடம் பெறும் சங்க இலக்கிய நூல்கள் - அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை

* சீத்தலை சாத்தனார் புறநானூற்றுப் பாடலில் குறிப்பிடும் மன்னன் - பாண்டியன் நன்மாறன்

* எந்த நூல் அரங்கேற்றத்தின்பொது குமரகுருபரருக்கு மீனாட்சியம்மை பெண் குழந்தை வடிவில் வந்து மாணிக்கமாலை பரிசளித்தார்? - மீனாட்சியம்மை குறம்

* குமரகுருபரர் வாய் ஊமை நீங்கிய உடன் இறைவனைப் பாடிய ிலக்கியம் - கந்தர் கலிவெண்பா

* குமரகுருபரரின் பேச்சுத்திறன் பெற்ற திருத்தலம் - திருச்செந்தூர் முருகன் திருக்கோவில்

* குமரகுருபரரின் காலம் - 17-ம் நூற்றாண்டு

* குமரகுருபரரின் பெற்றோர் - சண்முக சிகாமணி கவிராயர், சிவகாமி சுந்தரி அம்மையார்

* குமரகுருபரர் பிறந்த இடம் - திருவைகுண்டம் (நெல்லை மாவட்டம்)

* திரிகூடமலை என்பது எதனைக் குறிக்கிறது - திருக்குற்றால மலை

* மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழின் ஆசிரியர் - குமரகுருபரர்

* குற்றாலக் குறவஞ்சியில் திரிகூடமலை வளத்தை யார் கூறுகிறார் - குறத்தி

* குற்றாலக் குறவஞ்சி எவ்வகை இலக்கணம் - சிற்றிலக்கியம்

* குற்றாலக் குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவர் - திருக்குற்றால நாதர் (சித்திர சபை)

* குற்றாலக் குறவஞ்சியின் ஆசிரியர் - திரிகூட ராசப்பக் கவிராயர்

* நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவர் - நந்திவர்ம பல்லவன்

* நந்தித் கலம்பகத்தின் காலம் - கி.பி.9-ம் நூற்றாண்டு.

* நந்திக் கலம்பகத்தின் ஆசிரியர் - ஆசிரியர் பெயர் இல்லை

* காவடிச் சிந்து இலக்கிய வகைகளுள் முதன்மையானது - அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்து.

* அண்ணாமலை ரெட்டியாரின் பெற்றோர் - சென்னப்ப ரெட்டியார், ஒவு அம்மையார்.

* அண்ணாமலை ரெட்டியார் பிறந்த ஆண்டு 1861

* அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்துவில் பாடப்படும் இறைவன் - கழுகுமலை முருகப் பெருமான்

* அண்ணாமலை ரெட்டியார் ஊர் - சென்னிக்குளம் (திருநெல்வேலி மாவட்டம்)

* காவடிச் சிந்துவின் ஆசிரியர் - அண்ணாமலை ரெட்டியார்

* மூவேந்தர் - சேரர், சோழர், பாண்டியர்

* நான்கு வேதங்கள் - ரிக், யஜீர், சாமம், அதர்வணம்

* அறுசுவை என்பவை - கைப்பு, கார்ப்பு, கசப்பு, புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு

* ஏழு கடல்கள் -உப்புக் கடல், நன்னீர், பால், தயிர், நெய், தேன், கரும்புச் சாறு கடல்.

* நவரசம் என்பவை - நகைப்பு, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி(சினம்), உவகை. சாந்தம்.

* ஐந்திலக்கணம் என்பவை - எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி

* எண் வகை மெய்ப்பாடுகள் எவை - நகைப்பு, அழுகை, இளிவு, மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை.

* பசிவந்தால் பத்தும் பறந்து போகும் அந்த பத்து - மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம், உயர்ச்சி, தாளாண்மை, காதல் வேட்கை முதலியன.

* கலம்பகத்தின் உறுப்புகள் - கலம் -12, பகம் - 6, மொத்தம் = 18

* சிற்றிலக்கியங்களில் எத்தனை வகை - 96 வகை

* ஐந்தமிழ் - இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ், அறிவியல் தமிழ், ஆய்வுத் தமிழ்.

* மனச்சோர்வின்றி செயாற்றும் பண்பினை உணர்த்தும் திருக்குறள் அதிகாரம் - ஊக்கமுடைமை.

* நாமக்கல் கவிஞரின் பிறந்தநாள் - 19.10.1988.

* அகத்திணை - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை

* புறந்திணை - வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண்

* கல்வியில்லாப் பெண் களர்நிலம் போன்றவள் - பாரதிதாசன்

* வைக்கம் வீரர் -பெரியார்

* யாதும் ஊரே யாவரும் கேளிர் - கணியன் பூங்குன்றனார்.

* ஒப்பிலக்கணத் தந்தை என்று அழைக்கப்படுபவர் - கால்டுவெல்

* புலி தங்கிச் சென்ற குகை போன்றது - வீரத் தாயின் வயிறு

* நீர் வழிப் படூம் புணை போல் - ஊழ்வழிச் செல்லும் உயிர்

* கதிரவனைக் கண்ட தாமரை போல - மகிழ்ச்சி

* தணலிலிட்ட மெழுகு போல - கரைதல்

* உடுக்கை இழந்தவன் கைபோல - இடுக்கண் களைபவர்

அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்

* தாயுமானவர் பாடல்கள் - தமிழ்மொழியின் உபநிடதம்

* சிலப்பதிகாரம் - ஒற்றுமைக் காப்பியம், மூவேந்தர் காப்பியம், குடிமக்கள் காப்பியம், முதல் காப்பியம், தேசிய காப்பியம், முத்தமிழ் காப்பியம், சமுதாயக் காப்பியம்

* சீவகசிந்தாமணி - மணநூல்

* கம்பராமாயணம் - இராமவதாரம், இராமகாதை, கம்பச் சித்திரம், கம்ப நாடகம்

* அகநானூறு - நெடுந்தொகை

* பழமொழி - முதுமொழி

* பெரிய புராணம் - திருத்தொண்டர்புராணம், சேக்கிழார் புராணம்

* இலக்கண விள்க்கம் - குட்டித் தொல்காப்பியம்

* பட்டிணப்பாலை - வஞ்சி நெடும்பாட்டு

* கலித்தொகை - கற்றறிந்தோர் ஏத்தும் தொகை

* புறநானூறு - தமிழர் வரலாற்றுக் களஞ்சியம்

* பெரும்பாணாற்றுப்படை - பாணாறு

* மலைபடும்கடாம் - கூத்தராற்றுப்படை

* முல்லைப்பாட்டு - பெருங்குறிஞ்சி, நெஞ்சாற்றுப்படை

* குறிஞ்சிப் பாட்டு - காப்பியப்பாட்டு

* வெற்றிவேற்கை - நறுத்தொகை

* மூதுரை - வாக்குண்டாம்

* பெருங்கதை - கொங்குவேள் மாக்கதை, அகவற்காப்பியம்

* சிலப்பதிகாரம் - இரட்டைகாப்பியங்கள்

* மணிமேகலை - மணிமேகலை துறவு, பெளத்த காப்பியம்

* நீலகேசி - நீலகேசித்தெருட்டு

அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்கள்

* தமிழ்த்தென்றல், தமிழ் முனிவர், தமிழ்ப்பெரியார், தொழிலாளர் தந்தை - திரு.வி,க.

* தமிழ்த் தாத்தா - உ.வே.சாமிநாத ஐயர்

* வைணவம் தந்த செல்வி, சூடிக்கொடுத்த சுடர்கொடி - ஆண்டாள்

* நவீன கம்பர் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை

* ரசிகமணி - டி.கே.சி

* தத்துவ போதகர் - இராபார்ட் - டி - நொபிலி

* தமிழ்நாட்டின் ஜென் ஆஸ்டின் - அநுத்தமா

* தமிழ்நாட்டின் ஜேம்ஸ் உறாட்லி - சுஜாதா

* தென்னாட்டு தாகூர் - அ.கி.வேங்கடரமணி

* மொழி ஞாயிறு - தேவநேயப் பாவாணர்

* இசைக்குயில் - எம்.எஸ்.சுப்புலட்சுமி

* வேதரத்தினம் பிள்ளை - சர்தார்

* கரந்தைக் கவிஞர் - வேங்கடாஜலம் பிள்ளை

* தசாவதானி - செய்குத் தம்பியார்

* செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் - வ.உ.சி

* மே தினம் கண்டவர் - சிங்கார வேலனார்

* பகுத்தறிவு பகலவன், சுயசரிதைச் சுடர் பெரியார் - ஈ.வே.ராமசாமி

* தென்நாட்டு பெர்னாட்ஷா, தென்நாட்டுக் காந்தி, பேரறிஞர் - அறிஞர் அண்ணா

* தமிழ்நாட்டின் மாப்பஸான் - புதுமைப்பித்தன்

* தமிழ்நாட்டின் வோர்ட்ஸ்வோர்த், தமிழ்நாட்டுத் தாகூர் - வாணிதாசன்

* உவமைக் கவிஞர் - சுரதா

* கவிக்கோ - அப்துல் ரகுமான்

* உரையாசிரியர் - இளம் பூரணார்

* கவிமணி - தேசிய விநாயகம்பிள்ளை

* குழந்தைக் கவிஞர் - அழ.வள்ளிப்பா

* தொண்டர் சீர் பரவுவார் - சேக்கிழார்

* குறிஞ்சி மோமான் - கபிலர்

* கவிச்சக்கரவர்த்தி - கம்பன்

* ஆளுடையரசு, மருள் நீக்கியார், அப்பர் - திருநாவுக்கரசு

* ஆளுடையப்பிள்ளை, திராவிட சிசு - ஞான சம்பந்தர்

* முத்தமிழ் காவலர் - கி.ஆ.பெ.விஸ்வநாதம்

* திருக்குறளார் - வி.முனிசாமி

* இராமலிங்கனார் - ஆட்சித் தமிழ் காவலர்

* 20 ஆம் நூற்றாண்டின் ஒளவையார் - பண்டித அசலாம்பிகை

* பேயார் - காரைக்கால் அம்மையார்

* பாட்டுக்கொரு புலவன், மகாகவி, தேசிய கவிஞர் - பாரதியார்

* சிந்துக்குத் தந்தை - அண்ணாமலை செட்டியார்.

* மூதறிஞர் - இராஜாஜி

* சொல்லின் செல்வர் - இரா. பி. சேதுப்பிள்ளை

* காந்தியக் கவிஞர் - நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை

* கிறித்துவக் கம்பர் - எச்.ஏ. கிருஷ்ணப் பிள்ளை

* மகாவித்துவான் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை

* சிறுகதை மன்னன் - புதுமைப்பித்தன்

* சிறுகதை தந்தை - வ.வே.சு.ஐயர்

* புதுக்கவிதை தந்தை - பாரதியார்

* சோமசுந்தர பாரதியார் - நாவலர்

* ரசிகமணி பண்டிதமணி - மு.கதிரேசஞ் செட்டியார்

* தமிழ்நாட்டு பெர்னாட்ஷா - மு.வரதராசனார்

* தமிழ் வரலாற்று நாவலின் தந்தை - ககல்கி

* தமிழ் நாடகத் தந்தை - பம்மல் சம்பந்த முதலியார்

* தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் - சங்கரதாஸ் சுவாமிகள்

* தனித்தமிழ் இசைக்காவலர் - இராசா.அண்ணாமலைச் செட்டியார்.

நன்றி:

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்