தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

9.4.12

தமிழக அரசு ஊழியருகளுக்கு 7% அகவிலைப் படி உயர்வு

தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட உள்ளதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஜனவரி 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு நிலுவைத்தொகை வழங்கப்படும் எனவும் சட்டசபையில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு பணியளார்கள் ஆகியோர் இதன் மூலம் பயன்பெறுவர் எனவும், அகவிலைப்படி உயர்வு தமிழக அரசு ஊழியர்கள் 18 லட்சம் பேருக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ரொக்க பணமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் நடப்பு நிதியாண்டில் அரசுக்கு ரூ.1, 383.5 கோடி கூடுதலாக செலவாகும் எனவும் தெரிவித்துள்ளார். மத்திய அரசு ஊழியர்களுக்கு 1.1.2012 அகவிலைப்படி உயர்த்தப்பட்டதை தொடர்ந்து தமிழக அரசு ஊழியர்களுக்கும் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

நன்றி: க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்