தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

6.6.12

தமிழக அரசு பென்ஷன்தாரர்கள் குடும்பப் பாதுகாப்பு நிதி உயர்வு - அரசாணை

 தமிழக அரசு பென்ஷன்தாரர்கள் குடும்பப் பாதுகாப்பு நிதி, 25 ஆயிரம் ரூபாயில் இருந்து, 35 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழக அரசிடம் பென்ஷன் பெற்று வரும் பென்ஷன்தாரர்கள் இறந்தால், அவர்கள் குடும்பத்திற்கு, 25 ஆயிரம் ரூபாய் தமிழக அரசு பென்ஷன்தாரர்கள் குடும்பப் பாதுகாப்பு நிதியாக, வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதி, 35 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என, சமீபத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, தற்போது பென்ஷன்தாரர்கள் குடும்ப பாதுகாப்பு நிதி, 25 ஆயிரம் ரூபாயில் இருந்து, 35 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு, இதற்கான அரசாணை, இம்மாதம் முதல் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

அரசாணை வெளியிடப்பட்ட நாள் முதல், இந்த புதிய நிதி அமலுக்கு வருகிறது. இந்த நிதியை பெறுவதற்கான விதிகளில் மாற்றம் ஏதுமில்லை.

அரசாணை எண்: 184 நிதி(பென்சன்)த் துறை நாள்: 01-06-2012
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்