தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

5.8.12

புத்தகம் வைத்து தேர்வு எழுதினால் மாணவர் திறன் மேம்பட வாய்ப்பு

மாணவர் மனப்பாடம் செய்யும் நிலைமாறி, அறிவு மேம்படும் வகையில் புத்தகத்தை வைத்து எழுதும் தேர்வு முறை அமல்படுத்தப்படுமா, என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தற்போது மாணவர் அறிவை மேம்படுத்தவும், புத்தக சுமையை குறைக்கவும் எட்டாம் வகுப்புவரை முப்பருவ முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. பெற்றோரிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இம்முறையைப் போலவே, தேர்வு முறையிலும் நவீனத்தை அமல்படுத்த வேண்டும் என ஆசிரியர்கள், மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தற்போதுள்ள முறையில் மாணவர்கள் மனப்பாடம் செய்யும் முறையே அதிகம் உள்ளது. பெரும்பாலும் "புக் பேக்' என்ற, புத்தகத்தின் பின்பகுதியில் உள்ள வினாக்களே அதிகம் கேட்கப்படுகிறது. எனவே வினாவிடை புத்தகங்களையே அதிகம் நம்பி உள்ளனர். மனப்பாட சக்தியுள்ள மாணவரே அறிவுத்திறன் மிக்கவர் என்ற நிலை உள்ளது. இதைவிடுத்து புத்தகத்தினுள் இருந்து ஒரு வினாவை கேட்டால், "வினாத்தாள் மிகவும் கடினம்' என விமர்சனம் கிளம்புகிறது.

ஒரு தலைப்பிலான பாடம் அல்லது கேள்விக்கு ஒன்றுக்கு மேற்பட்ட புத்தகங்களை புரட்டிப் படிக்கும் வகையில் மாணவர்கள் தேர்வு முறை இருக்க வேண்டும். மாணவர்களுக்கு பாடம் நடத்தி முடித்தபின், தேர்வில் வினாக்களை பாடப்புத்தகத்தினுள் இருந்து நுணுக்கமாக கேட்க வேண்டும். தேர்வு எழுதும்போது புத்தகத்தையும் கையில் வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும். அவர்கள் விடையை புத்தகங்களில் தேடி எடுத்து எழுத வேண்டும். இதற்கு புத்தகத்தை ஆழ்ந்து படித்திருந்தால்தான் விடையை தெளிவாக எழுத முடியும். அரசு துறைகள் பலவற்றில் இதுபோன்ற தேர்வுகள் (டிபார்ட்மென்டல் எக்ஸாம்) தற்போது நடைமுறையில் உள்ளது.


உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பாஸ்கரன் கூறுகையில், "இத்தேர்வு மேலோட்டமாக பார்க்கும்போது எளிதாகத் தெரியலாம். ஆனால் மாணவர்கள் விடையை அறிய புத்தகத்தை ஆழ்ந்து படிப்பர் என்பதால், புரிந்துகொள்ளும் திறன் வளரும். அவர்களின் முழுத்திறனும் வெளிப்படும்,'' என்றார்.

நன்றி:

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்