தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

29.8.12

மதுரையில் 30ம் தேதி புத்தகத் திருவிழா

மதுரை தமுக்கம் மைதானத்தில், 7வது புத்தகத் திருவிழா நாளை (ஆக., 30) துவங்கி, செப்., 9 வரை நடக்கிறது. தினமும் காலை 11 முதல், இரவு 9 மணி வரை கண்காட்சி நடைபெறும். அனுமதி இலவசம். இதில், 151 நிறுவனங்களின் 212 அரங்குகள் இடம்பெறுகின்றன.

கலெக்டர் அன்சுல்மிஸ்ரா கூறியதாவது
:
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில், அரசு ஆதரவுடன் புத்தகக் கண்காட்சி நாளை மாலை 6 மணிக்கு துவங்குகிறது. மேயர் ராஜன் செல்லப்பா, துணைவேந்தர் கல்யாணி பங்கேற்கின்றனர். 120 தமிழ் புத்தக அரங்குகள், 81 ஆங்கில புத்தக அரங்குகள் இதில் அடங்கும்.

தினமும் மாலை 6 மணி முதல் கலை நிகழ்ச்சிகள், பிரபல பேச்சாளர், எழுத்தாளர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் இடம் பெறும். பள்ளி மாணவர்களுக்கு "புத்தகம் பேசுகிறது&' என்ற தலைப்பில் ஆக., 6ல் காலை 11 மணிக்கு பேச்சுப் போட்டி நடைபெறும். வெற்றி பெறுவோருக்கு முறையே ரூ. 5 ஆயிரம், ரூ. 3 ஆயிரம், ரூ. 2 ஆயிரம் மதிப்புள்ள நூல்கள் வழங்கப்படும்.

கல்லூரி மாணவர்களுக்கு ஆக., 1ல், காலை 11 மணிக்கு, "நூலும் ஓர் ஆயுதம்&' என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி நடைபெறும். இவர்களுக்கு முறையே ரூ. 7 ஆயிரம், ரூ. 5 ஆயிரம், ரூ. 3 ஆயிரம் மதிப்புள்ள நூல்கள் வழங்கப்படும். மூன்று வயது முதல் 13 வயது வரையுள்ள குழந்தைகளுக்கும் 3 பிரிவாக ஓவியப் போட்டி ஆக., 2 காலை 9 மணிக்கு நடைபெறும். போட்டிகள் தொடர்பாக 94435- 72224 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி:

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்