தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

9.8.12

கல்வி உதவித்தொகையில் முறைகேடு இல்லை: பள்ளி கல்வி இணை இயக்குனர்

"தர்மபுரி,கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கல்வி உதவி தொகையில் முறைகேடுகள் நடக்கவில்லை,'' என பள்ளி கல்வி இணை இயக்குனர் (பணியாளர் தொகுப்பு) ராஜராஜேஸ்வரி தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகள் செயல்பாடுகள் குறித்து பள்ளிகல்வி இனை இயக்குனர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் பள்ளி கல்வி இணை இயக்குனர் (பணியாளர்கள் தொகுப்பு) ராஜராஜேஸ்வரி கடந்த இரு நாட்களாக ஆய்வு செய்தார்.நேற்று தர்மபுரி செந்தில் மெட்ரிக்குலேசன் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.ஸி., ப்ளஸ் 2வில் கடந்த கல்வியாண்டில், 50 சதவீதத்துக்கு மேல் தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு கல்வி சதவீதத்தை அதிகரிப்பது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

அப்போது, ராஜராஜேஸ்வரி கூறியதாவது:
தமிழகம் முழுவதும் பள்ளிகல்வி இணைஇயக்குனர்கள் மூலம் பள்ளிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் எனது தலைமையில் நடந்த ஆய்வில் இங்கு மாணவர்களுக்கான உதவி தொகையில் முறைகேடுகள் ஏதும் நடக்கவில்லை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த இரு மாவட்டங்களுக்கு பணிக்கு வரும் ஆசிரியர்கள் தொடர் பணியாற்றாதாதல் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்கிறது. இதை போக்க அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும்.

இராண்டாம் பருவத்துக்கான பாட புத்தகங்கள் வழங்கப்படுகிறது. இப்பணி ஒரு சில நாட்களில் முடிக்கப்படும், இங்கு மாணவர்களுக்கு தேவையான கட்டிட வசதிகள் அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் நபார்டு வங்கி மூலம் செய்யபபடுகிறது. பாப்பாரப்பட்டியில் உள்ள உண்டு உறைவிட பள்ளியை ஆய்வு செய்தோம் அங்கு அனைத்து வசதிகளும் உள்ளது.

வரும் வழியில்:
பள்ளி வாகனங்களை சோதனை செய்ததில் பாப்பாரப்பட்டி தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி வாகனத்தில், 26 மாணவர்கள் செல்ல அனுமதிக்கப்பட்ட வாகனத்தில் 109 மாணவர்களை அழைத்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதே போல் அதே பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி வாகனத்தில், 26 பேருக்கு அனுமதிக்கப்பட்ட வாகனத்தில், 71 மாணவர்களை ஏற்றி செல்வதும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆர்.டி.ஓ.அங்கமுத்துவிடம் தெரிவிக்கப்பட்டதின் பேரில் போக்குவரத்து ஆய்வாளர்கள் அந்த வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

மாணவர்கள் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் உள்ள பழுதான் அரசு பஸ்களை உடனடியாக சரிசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிதாக துவங்கப்பட்டுள்ள அரசு ஆங்கில பள்ளிகளுக்கு தேவையான ஆசிரியர்கள் நியமிக்கபடுவார்கள்.

இவ்வாறு கூறினார்.

நன்றி:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்