தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

24.8.12

தலைமை இல்லாமல் முடங்கிய சாரணர் இயக்கம்

தமிழக சாரணர் இயக்கத்தின் தலைமைப் பதவிகளான, புரவலர், தலைவர், ஆணையர் இடங்கள் காலியாக உள்ளதால், சாரணர் இயக்கத்தின் செயல்பாடுகள் முடங்கி உள்ளன.

பாரத சாரண, சாரணியர் தமிழ்நாடு மாநில தலைமையகம், சென்னை திருவல்லிக்கேணியில் இயங்குகிறது. இதன் புரவலராக, மாநில கவர்னரும்; தலைவராக, பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும்; மாநில முதன்மை ஆணையராக, கல்வித் துறை இயக்குனரும் செயல்படுவர். இந்த தலைமைப் பதவியிடங்கள், மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நிரப்பப்படும். 2010ல், அப்போதைய கல்வித் துறை அமைச்சர் தங்கம்தென்னரசு, தலைவராக பொறுப்பேற்றார். ஆட்சி மாற்றம் காரணமாக, 2011ல் அவர் ராஜினாமா செய்தார். இவரை தொடர்ந்து, மாநில முதன்மை ஆணையராக செயல்பட்ட, அப்போதைய பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் பெருமாள் சாமியும் ராஜினாமா செய்தார்.

செயல்படாத நிலை:
சாரண இயக்கப் பதவிகளை வகிக்க, கவர்னர், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், கல்வித் துறை இயக்குனர் ஆகியோருக்கு, இயக்கத்தின் செயற்குழு அழைப்பு விடுக்கும். ஆனால், அழைப்பு விடுவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால், கடந்த ஓராண்டாக இந்தப் பதவிகள் காலியாக உள்ளன. இதனால், செயல்படாத நிலைக்கு சாரண இயக்கம் தள்ளப்பட்டு உள்ளது. மேலும், கடந்த, 2005லிருந்து, சாரண இயக்க மாநிலச் செயலர் பதவியில், நூலக இணை இயக்குனராக உள்ள தர்ம ராஜேந்திரன் செயல்படுகிறார். அரசின் அனுமதி பெறாமல் இந்தப் பதவியை அவர் வகித்து வருவதாக, தணிக்கைத் துறை குற்றம் சாட்டியது. இதுகுறித்து எந்த விளக்கமும் அளிக்காமல், செயலர் பதவியில் அவர் தொடர்வதாக, சாரண இயக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆர்வம் குறைகிறது:
இதுகுறித்து, சாரண இயக்க ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:
தலைவர்கள் இல்லாத காரணத்தால், இயக்கத்தின் பொதுக்குழு, செயற் குழு கூட்டப்படுவது இல்லை. இதனால், சாரண இயக்கத்தின் அனைத்து நடவடிக்கைகளும் முடங்கி உள்ளன. மாணவர்களிடையே உள்ள தேசிய பங்கேற்பு ஆர்வமும், தற்போது குறைந்து வருகிறது. திருவல்லிக்கேணியில் உள்ள சாரண, சாரணியர் இயக்கத் தலைமை அலுவலகத்தில் இயங்கி வந்த விற்பனை பிரிவு முடங்கி உள்ளது. இதனால், அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களிடமிருந்து, மாணவர்களுக்கான சீருடை, "பேஜ்' உள்ளிட்டவைகளை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குன்னூர் மாநில சாரண பயிற்சி மையத்தில், 15க்கும் மேற்பட்ட சிறப்பு முகாம் நடத்தப்பட்டு, மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். முறையான பராமரிப்பு இல்லாததால், இந்த மையம் செயல்படவில்லை. இதே நிலை தான், ஆலந்தூர் பயிற்சி மையத்திற்கும். சாரண இயக்கத்தின் தலைமை பதவிகள் நிரப்பப்பட்டால் தான், இந்த மையங்கள் புத்துயிர் பெறும்.

இதுதவிர, ராஜ்ய புரஸ்கார் விருதுக்கு தேர்வு பெற்ற, 12 ஆயிரம் சாரணர்களுக்கு, இயக்கத்தின் புரவலரான கவர்னர் கையெழுத்திடாத காரணத்தால், விருதுகள் வழங்கப்படவில்லை. ஜனாதிபதி விருதுக்கும், அவர்களால் விண்ணப்பிக்க முடியவில்லை.

இவ்வாறு ஆசிரியர் கூறினார்.

நன்றி:

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்