தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

4.8.12

கும்பகோணம் பள்ளி தீவிபத்து வழக்கு : சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

கும்பகோணத்தில் 2004ம் ஆண்டில் நிகழ்ந்த பள்ளி தீவிபத்து வழக்கை, 6 மாதங்களுக்குள் முடிக்க தஞ்சாவூர் செசன்ஸ் கோர்ட்டிற்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

2004ம் ஆண்டு, ஜூலை16ம் தேதி கும்பகோணத்தில் செயல்பட்டு வந்த பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 94 குழந்தைகள் பலியாயினர். இச்சம்பவம் தொடர்பாக வட்டாட்சியர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்ட 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில், குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த 8 ஆண்டுகளாக, இந்த வழக்கு தஞ்சாவூர் செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

7 பேர் விடுதலை: இவ்வழக்கு தொடர்பாக, இதுவரை 7 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

விடுதலை கோரி வழக்கு: இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் கல்வி அதிகாரி பாலகிருஷ்ணன், தன்னை இவ்வழக்கிலிருந்து விடுவிக்குமாறு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது, தீவிபத்து சம்பவம் நடைபெறுவதற்கு 1 ஆண்டிற்கு முன்னதாகவே, நான் அம்மாவட்டத்திலிருந்து வேறு இடத்திற்கு மாறிச் சென்று விட்டதாகவும், எனவே, என் மீது தவறில்லை எனக்கூறி, இவ்வழக்கிலிருந்து தன்னை விடுவிக்குமாறு அவர் அதில் தெரிவித்திருந்தார். அவர் பணியில் இருந்தபோது, பள்ளி விபத்து தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டிருந்தால், இவ்விபத்தை தவிர்த்திருக்கலாம் என்று கூறி பாலகிருஷ்ணனின் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

சுப்ரீம் கோர்ட் உத்தரவு : கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இவ்வழக்கை, அடு்த்த மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று தஞ்சாவூர் செசன்ஸ் கோர்ட்டிற்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

நன்றி:

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்