தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

21.8.12

சி.இ.ஓ., பணியிடங்கள் "காலி'' சுணங்கும் அரசு திட்டங்கள்

தமிழகத்தில் 27 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் மாணவர் நலன் கருதி அரசு அறிவித்த பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதில் சுணக்க நிலை ஏற்பட்டுள்ளது.மதுரை (எஸ்.எஸ்.ஏ.,), சிவகங்கை (எஸ்.எஸ். ஏ.,) விழுப்புரம் (ரெகுலர் மற்றும் எஸ்.எஸ்.ஏ.,) கடலூர் (ரெகுலர்), வேலூர் (எஸ்.எஸ்.ஏ.,), காஞ்சிபுரம் (எஸ்.எஸ்.ஏ.,) உள்ளிட்ட 27 சி.இ.ஓ.,க்கள் பணியிடங்கள் தற்போது காலியாக உள்ளன. மேலும், பல்வேறு மாவட்டங்களில் 27 கல்வி அலுவலர் பணியிடங்களும் பல மாதங்களாக காலியாக உள்ளன.

பள்ளி மாணவர்களுக்கு புத்தகம், நோட்டு, புத்தகப் பை, சீருடை, கலர் பென்சில், செருப்பு போன்ற என 13 வகையான விலையில்லா பொருட்களை அரசு அறிவித்துள்ளது. இத்திட்டங்களை செயல்படுத்தும் ஆய்வு அதிகாரிகளாக சி.இ.ஓ.,க்கள் உள்ளார்கள். சி.இ.ஓ., பணியிடம் காலியாக உள்ள பகுதிகளில் இத்திட்டங்கள் முடங்கிபோயுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். முப்பருவ கல்வி முறையை செயல்படுத்துவதிலும் இந்த மாவட்டங்களில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

இப்பிரச்னை குறித்து அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்  சாமி சத்தியமூர்த்தி கூறியதாவது: பள்ளி கல்வி துறையில் சி.இ.ஓ.,க்களின் பங்கு முக்கியம். ஆய்வு அதிகாரிகளும் அவர்கள் தான். பல மாவட்டங்களில் 27 சி.இ.ஓ.,க்கள் பணியிடங்கள் காலியாக இருப்பது கல்வியில் நேரடியாகவும், மறைமுகமாவும் பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தும். குறிப்பாக அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் சுணக்கம் ஏற்படும். அதிகாரிகள் இதுகுறித்து சிறப்பு கவனம் செலுத்தி சி.இ.ஓ.,க்களை நியமிக்க வேண்டும். 25 மாவட்ட கல்வி அலுவலர் (டி.இ.ஓ.,) பணியிடங்களும் காலியாக உள்ளன. அவற்றையும் சேர்த்து நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

நன்றி:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்