தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

11.9.11

ஒவ்வொரு மாதமும் இரண்டு சனிக்கிழமைகள் வேலை நாட்கள்; அனைத்து வேலை நாட்களிலும் 40 நிமிடங்கள் கூடுதல் பணி

சமச்சீர் கல்வி அமல்படுத்து வதில் ஏற்பட்ட சர்ச்சையால் பள்ளிகள் திறக்கவும், புத்தகங்கள் வழங்கவும் காலதாமதம் ஏற்பட்டது.இதை ஈடுகட்டும் வகையில் அனைத்து பள்ளிகளிலும், செப்., முதல், ஒவ்வொரு மாதமும் இரண்டு சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்த வேண்டும். அனைத்து வேலை நாட்களிலும் 40 நிமிடங்கள் கூடுதலாக வகுப்புகள் நடத்த வேண்டும், என அரசு உத்தரவிட்டுள்ளது. 

காலாண்டு தேர்வு விடுமுறை நாட்கள் 10 நாட்கள் என்பது ஐந்து நாட்களாக குறைக்கப்படுகிறது. 2012 மார்ச் 22ல் துவங்க இருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் முதல் வாரத்தில் துவங்கும். கல்வியாண்டின் கடைசி பணி நாள் ஏப்.,18 ற்கு பதில் ஏப்.,28 ஆகும். 

இதன் மூலம் மாணவர்களுக்கு ஏற்பட்ட 32 நாள் இழப்பு ஈடுகட்டப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நன்றி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்