தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

29.9.11

காலாண்டுத் தேர்வு விடுமுறை அக்., 9ம் தேதி வரை நீட்டிப்பு

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கான, காலாண்டுத் தேர்வு விடுமுறை, அக்., 9ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 10ம் தேதி மீண்டும் பள்ளிகள் துவங்குகின்றன.

இது குறித்து, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் மணி கூறும்போது, "பள்ளிகளில் நடந்து வரும் காலாண்டுத் தேர்வுகள், வரும் வெள்ளிக்கிழமையுடன் முடிகின்றன. அதன்பின், காலாண்டுத் தேர்வு விடுமுறை. விடுமுறைக்குப் பின், அக்., 7ம் தேதி மீண்டும் பள்ளிகள் துவங்கும் என, ஏற்கனவே அறிவித்திருந்தோம். தற்போது, பள்ளிகள் திறப்பு 10ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது' என்றார்.

அக்., 7ம் தேதி வெள்ளிக்கிழமை. அதன்பின், சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள். இதை கருத்தில்கொண்டு, பள்ளிகள் திறப்பு தேதி, 10ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

நன்றி:


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்