மத்திய அரசு உறுதி அளிக்காத வரை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்.), பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட மாட்டாது என்று மத்திய தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் ரூ. 5 லட்சம் கோடி நிதி உள்ளது. இந்தத் தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்று நிதி அமைச்சகம் வலியுறுத்தி வருகிறது.
ஸ்திரமற்ற பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதனால் ஏற்படும் நஷ்டத்தை அப்பாவித் தொழிலாளர்கள் மீது சுமத்தக் கூடாது என அரசின் முடிவை கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் எதிர்க்கின்றன.
பங்குச் சந்தை முதலீடுகளுக்கு உறுதியான வருமானம் கிடைக்கும் என்ற உத்தரவாதம் கிடையாது. இதில் நஷ்டம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதைக் கருத்தில் கொண்டு அரசு உத்தரவாதம் அளிக்காவிட்டால் பங்குச் சந்தை முதலீட்டுக்கு அனுமதிக்க முடியாது என்று தொழிலாளர் நலத்துறைச் செயலர் பி.சி. சதுர்வேதி, நிதிச் செயலர் அசோக் சாவ்லாவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பிஎப் நிதியை நிர்வகிக்கும் அமைப்பாக மத்திய அறங்காவலர் வாரியம் (சிபிடி) உள்ளது. இதன் தலைவராக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் உள்ளார். இவரது தலைமையில் கடந்த மாதம் 15-ம் தேதி கூட்டம் நடைபெற்றது. அப்போது ஓய்வுக் கால நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்வது குறித்து ஆராயப்பட்டது.
நன்றி:
- முகப்பு
- தலைப்புகள்
- மாநில பொறுப்பாளர்கள்
- மாவட்ட நிர்வாகிகள்
- இயக்க நடவடிக்கைகள்
- மாநில மாநாடு - 2007
- 'நமது முழக்கம்' மின்னிதழ்
- பள்ளி நாள்காட்டி 2016 - 17
- படிவங்கள்
- தமிழ்நாடு கல்வி விதிகள்
- துறைத் தேர்வுகள்
- அரசாணைகள்
- எளிமையாக்கப்பட்ட முப்பருவக் கல்வி மதிப்பீட்டுப் படிவங்கள்
- இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI)
- தமிழ்நாடு அரசு பாடப்புத்தகங்கள்
- வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள் - 2014
15.10.10
அரசு உறுதி அளிக்காதவரை பி.எஃப். பணம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட மாட்டாது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபலமான இடுகைகள்
-
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழு திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீப்பர் மேல்நிலைப்பள்ளியில் 25.11.2012 பகல் 2 மணிக்கு நடைபெ...
-
"பகுதிநேர ஆசிரியர்களுக்கான நேர்முகத் தேர்வுகள், இம்மாத இறுதிக்குள் முடிந்துவிடும். பிப்ரவரி முதல் வாரத்தில், பணி நியமன உத்தரவுகள் வ...
-
டில்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 7 வது ஊதியக் குழு அளித்த அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. 23.55...
-
மேலவைத் தேர்தலில் பட்டதாரி மற்றும் ஆசிரியர் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வரும் சனிக்கிழமை (நவம்பர் 6) கடைசி நாளாகும். ...
-
N-M Nov. 2011
-
ஆசிரியர் தகுதி தேர்வில் (TET) இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அ...
-
Constitution of School Management Committee
-
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் 8ம் தேதி தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அரசு,...
-
Report of the Committee for Evolution of the New Education Policy 2016


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக