தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

23.1.13

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட் டம்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட் டம் மதுரை அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் வைத்து 20-01-2013 ஞாயிறு மதியம்  நடைபெற்றது.

மாநிலத் தலைவர் சு.கயத்தாறு, தலைமையிடச் செயலாளர் ச.வெங்கடேசன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டச் செயலாளர் பாலமுருகன் வரவேற்றார். மாநிலப்பொதுச்செயலாளர் க.இசக்கியப்பன் வேலை அறிக்கையையும், அமைப்புச்செயலாளர் அ.அருணகிரியார் தேர்தல் அறிக்கையையும் முன்மொழிந்தனர். வரவு செலவு அறிக்கையை மாநிலப் பொருளாளர் ஆ.மதலைமுத்து, இணைய செயல்பாடு குறித்து துணைப்பொதுச் செயலாளர் ம.எட்வின் பிரகாஷ் ஆகியோர் பேசினர்.

இக்கூட்டத்திற்கு பின் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் க.இசக்கியப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உயர் நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற் றும் 25 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் களை பட்டதாரி ஆசிரியர்களாக உட் படுத்த வேண்டும். 10 ஆம் வகுப்பு முடித்த ஆசிரியர் பயிற்சி பட்டயம் வாங்கியவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். விலைவாசி உயர்வு, புதிய பென்சன் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பிப்-20,21 ஆகிய தேதிகளில் நடைபெறும் வேலை நிறுத்தப்போராட்டத்தில் 25 ஆயிரம் இடை நிலை ஆசிரியர்கள் பங்கேற்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக இசக்கியப்பன் கூறினார். 
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்