தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

29.11.12

தஇஆச மாநில செயற்குழு - முடிவுகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழு திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீப்பர் மேல்நிலைப்பள்ளியில் 25.11.2012 பகல் 2 மணிக்கு நடைபெற்றது.

மாநிலத் தலைவர் கயத்தாறு தலைமை வகித்தார். மாநில அமைப்புச் செயலாளர் அருணகிரியார், தலைமையிடச் செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைப் பொதுச் செயலாளர் எட்வின் பிரகாஷ் சங்க இணையதள செயல்பாடுகள் பற்றி விளக்கினார். மாநில பொதுச் செயலாளர் இசக்கியப்பன் தீர்மானங்களை முனமொழிந்தார். மாநில பொருளாளர் மதலைமுத்து நன்றி கூறினார்.

செயற்குழுவில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. உறுப்பினர் ஆண்டு சந்தாவை ரூ. 100லிருந்து 200 ஆக உயர்த்துதல்.

2. நமது முழக்கம் மின்னிதழை மாத இதழாக வெளியிட நடவடிக்கை எடுத்தல்.

3. அடுத்த செயற்குழுவில் விடுபட்ட இணை பொறுப்பாளர்களை தேர்வு செய்தல்.

4. 01.06.2006க்கு முன்பிருந்து தமிழ்நாட்டிலுள்ள அரசு /அரசு உதவி பெறும் உயர் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் 18,000 இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர் நிலைக்கு உட்படுத்திட இச்செயற்குழு மூலம் தமிழக அரசை கேட்டுக் கொள்கின்றோம்.

5. இடைநிலை ஆசிரியர்களின் சாதாரண நிலை ஊதியத்தை ஊதியக் கட்டு 1லிருந்து 2க்கு மாற்றி 9,300 – 34,800, தரஊதியம் 4,200 என அறிவித்திடவும் தேர்வுநிலை சிறப்புநிலைக்கு மத்திய அரசுபோல் ஊதிய விகிதம் தொடர்ந்து வழங்கிடவும் இச்செயற்குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கின்றது.

6. ஆசிரியர் பட்டய படிப்பு மேல்நிலைக் கல்விக்கு இணையானது என்ற சென்னை உயர்நீதி மன்ற ஆணையை அமல்படுத்தி பதவி உயர்வு வழங்கிட பள்ளிக் கல்வி இயக்குனரை இச்செயற்குழு மூலம் கேட்டுக்கொள்கின்றோம்.

7. ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்து மாநில பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்ய தமிழக அரசை கேட்டுக் கொள்கின்றோம்.

8. தன் பங்கேற்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்திட மத்திய, மாநில அரசுகளை இச்செயற்குழு கேட்டுக் கொள்கின்றது.

9. தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையில் ஏற்படும் சிக்கல்களை களைந்திட பள்ளிக்கல்வி அதிகாரிகள், ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் இணைந்த கலந்தாய்வு கருத்தரங்கை நடத்திட பள்ளிக்கல்வித் துறையை கேட்டுக்கொள்கின்றோம்.

10. பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் அல்லா பணியிடங்களையும் மாவட்ட, முதன்மைக் கல்வி அலுவலகங்களில் காலியாக உள்ள ஆசிரியர் அல்லா பணியிடங்களையும் நிரப்பிட தமிழக அரசை கேட்டுக் கொள்கின்றோம்.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்