தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

7.11.12

எப்போதும் இல்லாத முறையில் 2 கட்டமாக அரையாண்டு தேர்வு

கல்வித் துறையில் எப்போதும் இல்லாத அளவுக்கு முதல் முறையாக இரண்டு கட்டமாக அரையாண்டு தேர்வு நடக்கிறது. இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

10ம் வகுப்பு, 12ம் வகுப்புகளுக்கு நடப்பு கல்வியாண்டு முதல் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளும் பொதுத்தேர்வு போன்று ஒரே கேள்வித்தாள் அடிப்படையில் நடத்தப்படுகிறது.

தற்போது அரையாண்டு தேர்வுக்கான கால அட்டவணையை கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2க்கு டிசம்பர் 19 முதல் 22ம் தேதி வரை மொழி மற்றும் ஆங்கில தேர்வுகள் நடக்கின்றன. டிசம்பர் 23ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகள் வருகின்றன. பின்னர் ஜனவரி 2ம் தேதி முதல் ஏனைய பாடங்களுக்கான தேர்வு மீண்டும் தொடங்கி 7ம் தேதி 10ம் வகுப்பு தேர்வும், 10ம் தேதி பிளஸ் 2 தேர்வுகளும் முடிகின்றன. இதனால், மாணவர்கள் பண்டிகை தினங்களை உற்சாகத்துடன் கொண்டாட முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

வழக்கமாக டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் தேர்வுகள் தொடங்கி 22ம் தேதிக்கு மேல் விடுமுறை விடப்பட்டு, ஜனவரி 2ம் தேதி வகுப்புகள் தொடங்கும். ஆனால், இந்த முறை தேர்வுக்கு பின்னர் விடுமுறை இல்லை. நடுவிலேயே விடப்படுவதால் ஆசிரியர்களும் குழப்பம் அடைந்துள்ளனர். ஏனெனில், தேர்வு முடிந்த பின் விடைத்தாள் திருத்தும் பணியிலும், வகுப்பு நடத்த வேண்டிய பணியிலும் ஒரே நேரத்தில் சேர்த்து பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஆசிரியர்களுக்கு பணிச் சுமை அதிகரிக்கும். தேர்வுகளுக்கு நடுவே நீண்ட விடுமுறை என்ற இந்த நடைமுறை மாணவர்கள் மத்தியில் மனஉளைச்சலை ஏற்படுத்தும் என்ற கருத்தும் எழுந்துள்ளது.

ஏன் இந்த திடீர் மாற்றம்: இது தொடர்பாக தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில அமைப்பு செயலாளர் வள்ளிவேலு கூறுகையில், ‘பள்ளிகளுக்கு கல்வி கற்பிக்கின்ற காலம், விடுமுறை காலம், தேர்வு காலம் எல்லாம் உளவியல் ரீதியில் வகுக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்படுகிறது.
ஜனவரி மாதத்திலும் தேர்வுகள் நடைபெறுவதால் தொடர்ந்து கற்றல், கற்பித்தல் வகுப்புகள் பாதிக்கப்படுவதுடன் செய்முறை பயிற்சி, மாதிரி தேர்வுகள் தள்ளிப்போகவும் வாய்ப்பு உள்ளது. ஆசிரியர்களின் பணிச் சுமையும் அதிகரிக்கும். எனவே வழக்கம் போலவே தேர்வு கால அட்டவணை மாற்றி அமைக்க வேண்டும் என்றார்.

நன்றி:

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்