தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

3.11.12

சத்துணவில் 13 வகை கலவை சாதங்கள்; முட்டையில் நான்கு வகை மசாலா உணவுகள்

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவில், 13 வகை கலவை சாதங்கள், முட்டையில் நான்கு வகை மசாலா உணவுகள் அறிமுகப் படுத்தப் படுவதாக, முதல்வர் ஜெயலலிதா, சட்டசபையில் அறிவித்தார். அறிக்கையில் ஜெயலலிதா கூறியிருப்பதாவது:

சத்துணவு திட்டத்தை, காலத்திற்கு ஏற்ப மாற்றவும், குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்ப, உணவு முறையில் மாற்றம் ஏற்படுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. புதிய உணவு முறை குறித்து, சமையற் கலைஞர்கள், ஊட்டச் சத்து நிபுணர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மாநகராட்சி பள்ளி மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட அந்தநல்லூர் ஊராட்சி பள்ளியிலும், சோதனை முறையில்,கொண்டைக்கடலை புலவு சாதம் மற்றும் மிளகுத்தூள் கலந்த முட்டை தயாரித்து, பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. இதை, பள்ளிக் குழந்தைகள் விரும்பி உண்பது கண்டறியப்
பட்டதால், 13 வகை கலவை சாதங்கள், முட்டையில் நான்கு வகை மசாலாக்களை, சமையல் நிபுணர்கள் தயாரித்து, விளக்கம் செய்து காட்டினர். இதன் அடிப்படையில், புதிய உணவு வகைகளை, சத்துணவு திட்டத்தில் படிப்படியாக அறிமுகம் செய்ய, அரசுமுடிவெடுத்துள்ளது.

இந்த புதிய உணவு வகைத் திட்டம், ஒவ்வொரு மாவட்டத்திலும், முதலில் ஒரு பகுதியில் மட்டும், முன்னோடி திட்டமாக அறிமுகப்படுத்தப்படும்; அந்த பகுதியில், இந்த புதிய உணவு முறை திட்டத்தின் செயல்பாடு குறித்து அறிந்த பின், மற்ற வட்டாரங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்