தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

26.11.12

தஇஆச புதிய மாநில நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்வு

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில தேர்தல் திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீப்பர் மேல்நிலைப்பள்ளியில் 25.11.2012 காலை 11.00 மணிக்கு நடைபெற்றது. புதிய மாநில நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் 25வது ஆண்டின் மாநில பொதுக்குழு திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீப்பர் மேல்நிலைப்பள்ளியில் 25.11.2012 காலை 11.00 மணிக்கு மாநிலத் தலைவர் குமார் தலைமையில் நடைபெற்றது. மாநில அமைப்புச் செயலர் க. இசக்கியப்பன், தலைமையிடச் செயலர் சோமசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


பொதுச் செயலாளர் குமரேசன் தஇஆச மரபுப் படி புதிய மாநில நிர்வாகிகள் பட்டியலை முன்மொழிந்தார். தேர்தல் ஆணையாளர்களை அறிமுகம் செய்து மாநில பொருளாளர் உதயசூரியன் உரையாற்றினார். தேர்தல் ஆணையாளராக தூத்துக்குடி நெடுஞ்செழியனும் இணை ஆணையாளராக குமரி பாஸியும் பணியாற்றினர். புதிய மாநில நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்.

மாநிலத் தலைவர்:  திரு. கயத்தாறு, சென்னை.

பொதுச் செயலாளர்:  திரு. இசக்கியப்பன், திருநெல்வேலி.

பொருளாளார்:  திரு. மதலை முத்து, புதுக்கோட்டை.

அமைப்புச் செயலாளர்:  திரு. அருணகிரியார், திருச்சி.

தலைமையிடச் செயலாளர்:  திரு. வெங்கடேசன், காஞ்சிபுரம்

துணைப் பொதுச் செயலாளர்: திரு. எட்வின் பிரகாஷ், கன்னியாகுமரி 

தணிக்கையாளர்:  திரு. பாபு, நெல்லை.

மாநிலச் செயலாளர்(பெண்):  திருமதி.ஜெயராணி, காஞ்சிபுரம். 

துணைத்தலைவர்கள்:  1. திரு. பாக்கியராஜ், வேலூர். 2. திரு.நவநீதசுந்தர், திருவண்ணாமலை. 

இணைச்செயலாளர்கள்: 1. திரு. அப்பாதுரை, விருதுநகர். 2.  திரு. ஸ்டீபன், விழுப்புரம். 

பின்னர் புதிய பொறுப்பாளர்களை வாழ்த்தி முன்னாள் பொறுப்பாளர்கள் உரையாற்றினர். மாவட்டம் சார்பில் நெல்லை ராஜமார்த்தாண்டம், குமரி ஹெர்பர்ட் ராஜாசிங், விருதுநகர் முருகேசன் மற்றும் தூத்துக்குடி சுந்தர் ராஜன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். புதிய பொறுப்பாளர்கள் ஏற்புரை ஆற்றினர். 
.

1 கருத்து:

  1. அனைத்து புதிய பொறுப்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.
    செ.ஆனந்த்
    இநிஆ
    அமமேநிபள்ளி,ஊத்தங்கரை

    பதிலளிநீக்கு


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்