தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

22.3.12

முப்பருவ தேர்வு முறை - பள்ளி நாட்கள் பிரிப்பு

அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றவுடன், கல்லூரிகளில் செமஸ்டர் முறை போல், பள்ளிகளில் முப்பருவ தேர்வு முறையை செயல்படுத்த உத்தரவிட்டது. இது, வரும் கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும்.

ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரை, சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து, முப்பருவமுறை குறித்து, சென்னையில் பயிற்சி அளிக்கப்படும். ஒரு பாடத்திற்கு, மாவட்டத்திற்கு இருவர் தேர்வு செய்யப்படுவர். இவர்கள், மற்ற ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பர்.

பள்ளி நாட்கள், மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
  • ஜூன் 1 முதல் அக்டோபர் 1 வரை- முதல் பருவம்; மொத்த வேலை நாள்- 81.
  • அக்., 3 முதல் டிச., 31 வரை- இரண்டாம் பருவம்; வேலை நாள்- 56.
  • ஜன., 1 முதல் ஏப்., 26 வரை- மூன்றாம் பருவம்; வேலை நாள்- 73.
ஒவ்வொரு பருவம் முடிவிலும், தேர்வு நடக்கும்.
 
நன்றி:
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்