தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

20.3.12

டி.இ.டி., பாடத்திட்டம் வெளியாவதில் இழுபறி

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத் திட்டம் வெளியாவதில், இழுபறி ஏற்பட்டுள்ளது. 

வரும் 22ம் தேதி முதல், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பம், மாநிலம் முழுவதும் வழங்கப்படும் நிலையில், தேர்வு விவரங்கள் அனைத்தையும், ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து விட்டது. இதைத் தொடர்ந்து, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வுக்கென, தனித்தனியே பாடத் திட்டங்களை வெளியிட வேண்டும். ஆனால், இதுவரை வெளியிடவில்லை.
 

 தேர்வெழுதத் திட்டமிட்டுள்ள பட்டதாரிகளும், டி.இ.டி., தேர்வை வைத்து, "கல்லா" கட்ட திட்டம் போட்டிருக்கும் பயிற்சி மையங்களும், தேர்வு வாரியத்தின் பாடத் திட்ட விவரங்களுக்காக, காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரத்தில் விசாரித்தால், "வெளியிடுவோம்" என, தொடர்ந்து, ஒரே பதிலை கூறி வருகின்றனர். 


பாடத் திட்டங்களை வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள இழுபறி, தேர்வு எழுத திட்டமிட்டுள்ளவர்களை, கவலை அடையச் செய்துள்ளது.

நன்றி:

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்