தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

13.3.12

உமா மகேஸ்வரியின் மகள்களுக்கு ரூ.2 லட்சம்: அரசாணை வெளியீடு

சென்னையில், மாணவனால் கொலை செய்யப்பட்ட ஆசிரியை உமா மகேஸ்வரியின், இரு மகள்களுக்கு, தலா 1 லட்சம் ரூபாய் வீதம், 2 லட்சம் ரூபாயை, முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை பாரிமுனையில் உள்ள, செயின்ட் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில், அறிவியல் ஆசிரியையாக பணிபுரிந்து வந்த உமா மகேஸ்வரியை, அதே பள்ளியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஒருவன், கடந்த மாதம், 9ம் தேதி, கத்தியால் குத்தி கொலை செய்தான். இச்சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

"கொலை செய்யப்பட்ட ஆசிரியையின் குடும்பத்திற்கு, முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து, 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும்' என, கடந்த மாதம், 16ம் தேதி, முதல்வர் அறிவித்தார். இதையடுத்து, உமா மகேஸ்வரியின் மகள்கள் சங்கீதா மற்றும் ஜனனி ஆகியோருக்கு, தலா, 1 லட்சம் ரூபாய் வழங்கவும், அந்த நிதியை வைப்பு நிதி திட்டத்தின் கீழ் முதலீடு செய்யவும், தமிழக அரசு உத்தரவிட்டு, அரசாணை வெளியிட்டுள்ளது.

நன்றி:

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்