தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

13.3.12

தேர்வு மையம் செல்ல இலவச பஸ் பாஸ் அனுமதி

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள், தேர்வு மையங்களுக்கு கட்டணம் இல்லாமல் செல்ல, தங்கள் இலவச பஸ் பாஸ்களை பயன்படுத்தலாம் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

பொதுத் தேர்வு எழுதுபவர்கள், தங்கள் பள்ளிகள் அல்லாத தேர்வு மையமாக நிர்ணயிக்கப்பட்ட பள்ளிகளுக்குச் செல்கின்றனர். இதற்காக, இவர்கள் இலவச பஸ் பாஸ் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது.இந்த நிலையில், தமிழக அரசு, "அங்கீகரிக்கப்பட்ட இலவச பஸ் பாஸ் பயன்படுத்தும் மாணவ, மாணவியர், தங்களின் இருப்பிடத்தில் இருந்து, தேர்வு நடக்கும் மையம் வரை சென்று வர, பஸ் பாஸ்களை அனுமதிக்க வேண்டும்' என, போக்குவரத்து மண்டல மேலாளர்களுக்கு, உத்தரவு பிறப்பித்துள்ளது.

உத்தரவு குறித்து, கிளை மேலாளர் ஒருவர் கூறியதாவது:

தேர்வு எழுதச் செல்லும் மாணவ, மாணவியரை, பஸ்சின் கண்டக்டர், டிரைவர்கள், இலவசமாக அழைத்துச் செல்ல வேண்டும். சந்தேகம் ஏற்படின், அவர்கள் ஹால் டிக்கெட் கேட்டு, உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்