தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

16.3.12

மாத ஊதியம் வாங்குவோருக்கு இன்னொரு அடி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான(ஈ.பி.எஃப்) வட்டி குறைப்பு!


தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான (பி.ஃஎப்) வட்டி விகிதத்தை மத்திய அரசு குறைத்துள்ளது.

பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன் இந்த 'நல்ல வேலையை' மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி செய்துள்ளார்.

இதன்படி 2011-12-ம் நிதி ஆண்டுக்கு பி.ஃஎப் வட்டி விகிதம் 9.5 சதவீதத்திலிருந்து 8.25 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மாத ஊதியதாரக்களுக்கு இருக்கும் ஒரே கட்டாய சேமித்து இந்த பி.ஃஎப் தான். ஓய்வு பெற்றுச் செல்லும்போது இந்தத் தொகை மாத ஊதியதாரக்களுக்கு மித உதவிகரமாக இருக்கும்.

இந்தத் தொகைக்கு மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை வட்டி அளித்து வருகிறது. நமது பி.ஃஎப் தொகையை மத்திய அரசு தனது திட்டப் பணிகளுக்கு எடுத்து பயன்படுத்தி வருகிறது. இதனால், அதற்கு வட்டியைத் தருகிறது.

இந்த வட்டியைக் குறைக்கப் போவதாக பல மாதங்களாகவே மத்திய அரசு கூறி வந்தது. ஆனால், 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு பி.ஃஎப் வட்டி விகிததில் மத்திய அரசு கை வைக்காமல் இருந்து வந்தது.

இந் நிலையில் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு சாதகமாக தேர்தல் முடிவு அமையாததால், இந்த வட்டியை அதிரடியாக 1.25 சதவீதம் வரை குறைத்து 'புண்ணியம்' தேடிக் கொண்டுள்ளார் பிரணாப்ஜி.

கடந்த 10 ஆண்டுகளில் இவ்வளவு பெரிய அளவுக்கு பி.ஃஎப் வட்டி விகிதம் குறைக்கப்பட்டதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாடிக்கையாளர்களுக்கு 9.5 சதவீத வட்டி அளித்தால் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வாரியத்துக்கு ரூ. 526.44 கோடி பற்றாக்குறை ஏற்படும் என்றும், இப்போது நிர்ணயிக்கப்பட்ட 8.25 சதவீத வட்டி அளித்தால் ரூ. 24 லட்சம் மட்டுமே நஷ்டம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி:
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்