தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

16.11.11

தனியார் பள்ளி கல்வி கட்டணம்அரசு செலுத்த பள்ளிகள் கேட்கலாமா?

வசதியற்ற குழந்தைகள் மூவருக்கான கல்விக் கட்டணத்தைச் செலுத்துமாறு, அரசிடம் தனியார் பள்ளிகள் கோரலாம் என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. குழந்தைகளுக்கான சீருடை, புத்தகங்களை இலவசமாக வழங்கவும், அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், தண்டலத்தில், பாரத வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளது. இங்கு, நான்கு மற்றும் ஆறாவது வகுப்பு படிப்பவர்கள் சத்யா, விஷ்ணு. இவர்களுக்கான கல்விக் கட்டணத்தைச் செலுத்த முடியவில்லை என்றும், தொடர்ந்து இந்தப் பள்ளியில் படிக்க அனுமதிக்க வேண்டும் என்றும், இவர்களின் தந்தை மோகன் என்பவர், ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.


கடலூர் மாவட்டம், வேப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளியில், ஒன்றாவது வகுப்பில் லட்சுமணகுமார் என்கிற மாணவர் சேர்ந்துள்ளார். கல்விக் கட்டணம் செலுத்தாததால், வகுப்பறைக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. இதையடுத்து, எட்டாம் வகுப்பு வரை, லட்சுமணகுமாருக்கு இலவசமாக புத்தகங்கள், சீருடை வழங்கவும், கல்விக் கட்டணம் வசூலிக்கத் தடை விதிக்கவும் உத்தரவிடக் கோரி, ஐகோர்ட்டில் அவனது தந்தை சிவகுமார் மனு தாக்கல் செய்தார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாரி, "கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி, 14 வயது வரை குழந்தைகள் அனைவரும், இலவசக் கல்வி பெற முடியும். அரசு உதவி பெறாத பள்ளிகள் என்றால், அங்கு ஆதி திராவிடர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு, 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்' என வாதாடினார்.

மனுக்களை விசாரித்த நீதிபதி என்.பால்வசந்தகுமார் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர்கள் ஏழ்மை நிலையில் உள்ளனர். பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்கள். தங்கள் குழந்தைகளுக்கு கல்விக் கட்டணம் செலுத்த முடியவில்லை என கூறுகின்றனர். மனுதாரர்களின் குழந்தைகளை, பள்ளியில் தொடர்ந்து படிக்க நிர்வாகம் அனுமதிக்க வேண்டும். குழந்தைகளுக்கு இலவசமாக சீருடை மற்றும் புத்தகங்களை, இரண்டு நாட்களில் அரசு வழங்க வேண்டும்.

கல்விக் கட்டண நிர்ணயக் குழு பிறப்பித்த கட்டணத்தை, மனுதாரர்களால் செலுத்த முடியவில்லை. எனவே, கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி, கல்விக் கட்டணத்தை அரசிடம் செலுத்தக் கோரலாம். கோர்ட்டில் இருந்து உத்தரவு பெற்ற பின், கல்விக் கட்டணத்தை, அரசிடம் பள்ளி நிர்வாகம் கோரலாம். விசாரணை, வரும் 21 ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது.

இவ்வாறு, நீதிபதி என்.பால்வசந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.

நன்றி:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்