தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

16.11.11

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - விதிமுறைகள்

6 முதல் 14 வயதுள்ள குழந்தைகளுக்கு கல்வியைக் கட்டாயமாக்கும் வகையில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்தச் சட்டம் அமலுக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கழித்து தமிழக அரசின் சார்பில் விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

  • மாணவர்களின் பெற்றோர்களை உள்ளடக்கிய பள்ளி நிர்வாகக் குழு பள்ளியின் வளர்சிக்கான மூன்றாண்டு திட்டத்தைத் தயாரிக்க வேண்டும்.
  • இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு வகுப்பிலும் நடைபெறும் மாணவர் சேர்க்கை, தேவைப்படும் கூடுதல் ஆசிரியர்கள், கட்டமைப்பு வசதிகள், தேவைப்படும் நிதி போன்ற விவரங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும்.
  • பள்ளி நிர்வாகக் குழுவின் தலைவர் அல்லது துணைத் தலைவர், அமைப்பாளர் ஆகியோர் கையெழுத்திட்ட இந்தத் திட்ட அறிக்கை நிகழ் நிதியாண்டு முடிவதற்கு முன்னதாக உள்ளூர் நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
பள்ளி நிர்வாகக் குழுவின் கூடுதல் கடமைகள்:
பள்ளி நிர்வாகக் குழு ஆசிரியர்களுக்கு கற்பித்தல் அல்லாத பணிகள் அதிகம் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளல், அனைத்து குழந்தைகளும் தொடர்ந்து கல்வி பயில்வதை உறுதிப்படுத்துதல், ஒவ்வொரு ஆண்டும் கல்விச் செலவு தொடர்பான ரசீதுகளை நிதியாண்டு முடிந்த மூன்று மாதங்களுக்குள் உள்ளூர் நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகள் நலன், மன நலன் போன்ற விஷயங்களை பள்ளி நிர்வாகக் குழுவில் விவாதிக்க அந்தக் குழுவின் அமைப்பாளர் 3 ஆலோசகர்கள் வரை கூட்டத்துக்கு அழைக்கலாம்.

ஆசிரியர்களுக்கான தகுதிகள்: கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச தகுதிகளை ஆசிரியர்கள் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு தகுதியில்லாத ஆசிரியர்கள் சட்டம் நடைமுறைக்கு வந்தது முதல் 5 ஆண்டுகளுக்குள் அந்தத் தகுதியைப் பெற வேண்டும்.


தனியார் பள்ளி ஆசிரியகளுக்கு இந்தச் சட்டத்தின் படி சம்பளம் வழங்க வேண்டும்.


ஏற்கெனவே நடைமுறையில் உள்ள நடத்தை விதிகளை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டும், பள்ளி நிர்வாகக் குழுவுக்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும்.


பயிற்சிகளில் பங்கேற்பது, பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தகங்கள் தயாரிப்பு, ஒவ்வொரு குழந்தைக்குமான பதிவேடு போன்றவையும் ஆசிரியர்களுக்கான கூடுதல் கடமைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.


ஒவ்வொரு பள்ளிக்கும் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை மாநில அரசோ, உள்ளூர் நிர்வாகமோ அறிவிக்கும்.


மாநில அரசின் கடமைகள்: ஒரு கிலோமீட்டர் தூரத்துக்குள் இருக்குமாறு தொடக்கப் பள்ளிகளைத் தொடங்க வேண்டும். மூன்று கிலோமீட்டர் தொலைவுக்குள் இடைநிலைப் பள்ளியைத் தொடங்க வேண்டும். பள்ளிகளைத் தொடங்க வாய்ப்பில்லாத இடங்களில் போக்குவரத்துக்கும், விடுதிகளுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.


அதிக மக்கள் தொகை உள்ள இடங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளிகளை மாநில அரசு தொடங்க வேண்டும்.


எங்கெங்கு தேûவையோ அங்கெல்லாம் தொடக்கப் பள்ளிகளை (ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை) இடைநிலைப் பள்ளிகளாக (ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை) தரம் உயர்த்த வேண்டும்.


அதேபோல், உடல் ஊனமுற்ற குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதற்கு உரிய ஏற்பாடுகளை உள்ளூர் நிர்வாகமும், அரசும் செய்ய வேண்டும்.


இந்தச் சட்டத்தை அமல்படுத்தத் தேவையான நிதி தொடர்பாக ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசுக்கு பரிந்துரையை வழங்க வேண்டும்.


அதேபோல், உள்ளூர் நிர்வாகம் அந்தப் பகுதியில் குழந்தைகளைக் கணக்கெடுக்க வேண்டும். குழந்தை பிறப்பு முதல் 14 வயது வரையும், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு 18 வயது வரையும் ஆவணங்களைப் பாதுகாக்க வேண்டும்.


அந்த ஆவணங்களில் குழந்தையின் பெயர், பிறந்த தேதி, பிறந்த இடம், பெற்றோர் அல்லது காப்பாளரின் தொழில், குழந்தை பயிலும் வகுப்பு, ஏழை மற்றும் சமூகத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவரா போன்ற விவரங்களை அவர்கள் பாதுகாக்க வேண்டும்.


வரையறுக்கப்படாத உள்ளூர் நிர்வாகம்:

தமிழக அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட விதிமுறைகளில் உள்ளூர் நிர்வாகம் என்பது எது என்று விளக்கம் தரப்படாமல் விடப்பட்டுள்ளது.


கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் உள்ளூர் மக்களுக்கு பள்ளி நிர்வாகத்தில் அதிக முக்கியத்துவம் தரும் வகையில் இருந்தது.


ஆனால், கடந்த தி.மு.க. ஆட்சியில் வெளியிடப்பட்ட வரைவு விதிகளில் உள்ளூர் கல்வி நிர்வாகத்திடம், அதாவது கல்வி அதிகாரிகளிடமே அனைத்து அதிகாரங்களும் வழங்கும் வகையில் இருந்தது. இதற்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்போது வெளியிடப்பட்டுள்ள விதிமுறைகளில் கல்வி நிர்வாகம் என்ற வார்த்தை நீக்கப்பட்டிருந்தாலும், உள்ளூர் நிர்வாகம் என்ற சொல் விளக்கப்படாமலேயே உள்ளதாக கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

நன்றி:

அதன் விவரம்:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்