தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

9.11.11

எட்டாம் வகுப்பு தனித்தேர்வு ரத்து; தேர்வு துறை இயக்குனருக்கு நோட்டீஸ்

எட்டாம் வகுப்பு தனித்தேர்வை ரத்து செய்ததை எதிர்த்து தாக்கலான வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை, இதுகுறித்து பதிலளிக்க பள்ளி கல்வி துறை இயக்குனருக்கு உத்தரவிட்டது.

மதுரை கே.புதூரை சேர்ந்த வி.பாண்டித்துரை தாக்கல் செய்த ரிட் மனு
வறுமையினால் எட்டாம் வகுப்பை பாதியில் முடித்தேன். ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றேன். இலகு ரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றேன். கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற வேண்டி விண்ணப்பித்தேன். வட்டார போக்குவரத்து அதிகாரி பத்தாம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி தகுதியிருக்க வேண்டும் என தெரிவித்தார். நான் தேர்வு துறை துணை இயக்குனர் அலுவலகத்தை எட்டாம் வகுப்பு தனித்தேர்வு எழுத தொடர்பு கொண்டேன். தனித்தேர்வை 2010 அக்., 13ல் அரசு ரத்து செய்து விட்டதாக துணை இயக்குனர் தெரிவித்தார். தனித்தேர்வை ரத்து செய்த அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மீண்டும் எட்டாம் வகுப்பு தனித்தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. 

மனுதாரர் சார்பில் வக்கீல்கள் மயில்வாகன ராஜேந்திரன், சந்தானம் ஆஜராயினர்.

நீதிபதி டி.ராஜா, "மனு குறித்து மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்க பள்ளி கல்வி துறை இயக்குனர், தேர்வு துறை துணை இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப,'' உத்தரவிட்டார்.

நன்றி:



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்