தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

25.11.11

உயர்த்தப்பட்ட பணிக்கொடை ஓய்வூதியர்கள் நேரில் பெறலாம்

உயர்த்தப்பட்ட பணிக்கொடையை, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், நேரில் பெற்றுக் கொள்ளலாம்' என, மாநில முதன்மை கணக்காயர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இவ்வாண்டு ஜூலை 1ம் தேதி மற்றும் அதற்கு பிறகு, பணியிலிருந்து ஓய்வு பெற்ற தமிழக அரசு ஊழியர்கள், அக்., 3ம் தேதியிட்ட உத்தரவுப்படி, அகவிலைப்படி, 51 சதவீதத்திலிருந்து, 58 சதவீதமாக உயர்த்தப்பட்டதால், பணிக்கொடை தொகையில் ஏற்படும் உயர்வை, அந்தந்த மாவட்டக் கருவூல அதிகாரிகள் வழங்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாண்டு, ஜூலை 1ம் தேதியிலிருந்து செப்., 30ம் தேதி வரையுள்ள காலத்தில், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களில், எவருக்கெல்லாம் அரசு உத்தரவுக்கு முன்பு, ஓய்வூதிய கொடுப்பாணை வழங்கப்பட்டதோ, அவர்கள் நேரடியாக, திருத்திய பணிக்கொடை பலனை பெற்றுக் கொள்ளலாம். சம்பளம் வழங்கும் அதிகாரிகள், வழக்கமாக பணிக் கொடை கொடுப்பாணைகளுடன், பட்டியல் சமர்ப்பிக்க தேவையில்லை.


இவ்வாறு மாநில முதன்மை கணக்காயர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நன்றி:


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்