தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

16.11.11

கல்விக்கான விதிமுறைகளை அறிவித்தது அரசு

இந்தியாவில் உள்ள அனைத்து குழந்தைகளும் 8ம் வகுப்பு வரை கல்வி பெற உரிமை உள்ளது. தனியார் பள்ளிகள் ஏழை மாணவர்களுக்காக 25 சதவீத இடங்களை இலவசமாக ஒதுக்க வேண்டும். ஏழை மாணவர்கள் கல்வி பெற பெற்றோரின் கல்வி தகுதியை நிபந்தனையாக இருக்கக்கூடாது. மக்கள் வாழ்விடம் அமைந்துள்ள பகுதிகளில் ஒரு கி.மீ., தூரத்துக்குள் கல்வி வசதி பெற செய்வது அரசின் கடமையாக இருக்க வேண்டும் என மத்திய அரசின் கல்விச்சட்டத்துக்கு தமிழக அரசு விதிகள் வகுத்துள்ளது.

மேலும் ஆசிரியர்களுக்கான தகுதி குறித்த விதிமுறைகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. பள்ளிகளில் செய்ய வேண்டிய உள்கட்டமைப்பு செய்யப்பட வேண்டிய விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. . விதிமுறைகளை அமல்படுத்தாத பள்ளிகளுக்கு 10 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டும். தவறு தொடரும் பட்சத்தில் ஒவ்வொரு நாளும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

நன்றி:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்