தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

16.11.11

1,806 இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு; விடுபட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கி உத்தரவு

தமிழகத்தில் 1,806 இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு செய்யப்படுகின்றனர்.

தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு சென்னையில் வரும் 20ம் தேதி நடக்கிறது.

இதில் இடைநிலை ஆசிரியர்களில் இருந்து
  • தமிழாசிரியர்களாக 790 பேர்,
  • கணித பட்டதாரி ஆசிரியர்களாக 345 பேர்,
  • ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களாக 200,
  • அறிவியல் 83,
  • புவியியல் 3,
  • வரலாறு பட்டதாரி ஆசிரியர்களாக 385 பேர்
உட்பட மொத்தம் 1,806 பேர் பதவி உயர்வு பெறுகின்றனர்.

சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தில் பி.எட் படித்து கடந்த கல்வி ஆண்டில் சீனியாரிட்டி பட்டியலில் இருந்த ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு பதவி உயர்வு அளித்து இக்கல்வி ஆண்டில் சேர்க்கப்பட்டதாகவும், விடுபட்ட ஆசிரியர்கள் பட்டியலும் இணைக்கப்பட்டுள்ளதாகவும் பள்ளிக் கல்வி இணை இயக்குனர் தெரிவித்தார்.


இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களாக மாற்றப்படுவதால் 2011-12ம் கல்வி ஆண்டில் பதவி உயர்வில் உள்ள இடைநிலை ஆசிரியர்களை அவர்கள் பணியாற்றும் பள்ளியிலேயே பட்டதாரி/தமிழாசிரியர் பணியிடங்களாக மாற்றி பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்று பள்ளி கல்வி இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) பழனிச்சாமியிடம், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில அமைப்பு செயலாளர் இசக்கியப்பன், மாநில துணைத் தலைவி வாசுகி, மாநில பொது செயலாளர் குமரேசன், விஜயகுமார் உட்பட பலர் வலியுறுத்தினர்.

நன்றி:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்