தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

18.1.12

பள்ளிக்கல்வித்துறைக்கு புதிய அமைச்சராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி அறிவிப்பு

தமிழக அமைச்சர்களை மீண்டும் மாற்றியமைத்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

அதன்படி, 
  • சி.வி. சண்முகத்திற்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை
  • அக்ரி கிருஷ்ணமூர்த்தி, பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டுத்துறை, 
  • எஸ்.பி.வேலுமணிக்கு வருவாய்த்துறை, 
  • பி. தங்கமணிக்கு சுரங்கம், கனிமம் மற்றும் தொழில்துறை வழங்கப்பட்டுள்ளது. 
முதல்வர் ஜெயலலிதா பரிந்துரையிலான இந்த மாற்றத்திற்கு கவர்னர் ரோசைய்யா ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழக அமைச்சரவையில் ஏற்கனவே நான்கு முறை மாற்றம் செய்யப்பட்டது. இது தவிர, இலாகாக்களும் அவ்வப்போது மாற்றப்பட்டன. இறுதியாக நடைபெற்ற மாற்றத்தில், தமிழக அமைச்சரவையில் இருந்து, பரஞ்ஜோதி ராஜினாமா செய்தார். செல்வி ராமஜெயம் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பதிலாக, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக திருப்பூர் ஆனந்தனும், சமூகநலத் துறை அமைச்சராக வளர்மதியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நன்றி:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்