தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

20.1.12

"தானே' புயல்: அரசு ஊழியர் சம்பளம் பிடித்தம் விதிகள் அறிவிப்பு

"தானே' புயல் நிவாரணத்துக்காக, தமிழக அரசு ஊழியர்களின் ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. புயல் பாதித்த பகுதிகளை சீரமைக்க, அதிகளவு நிதி தேவைப்படும் என்பதால், தாராளமாக நிதி வழங்கும்படி, முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து, பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள், தங்கள் ஊழியர்களின் ஒரு நாள் சம்பளத்தை, புயல் நிவாரணத்துக்கு தர தயாராக இருப்பதாக, அரசுக்கு கடிதங்கள் கொடுத்திருந்தனர்.

இதை ஏற்று, தலைமைச் செயலர் பிறப்பித்துள்ள உத்தரவு வருமாறு


ஒரு நாள் சம்பளத்தை வழங்க விரும்பும் ஊழியர்கள், தங்கள் சம்மதத்தை, சம்பந்தப்பட்ட சம்பள கணக்கு அதிகாரியிடம் எழுத்துபூர்வமாக கொடுக்க வேண்டும்.

* பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு, 100 சதவீதம் வரிவிலக்கு அளிக்கப்படும்.

* ஒரு நாளுக்கு மேலாக சம்பளத்தை தர விரும்பும் ஊழியர், எத்தனை நாட்கள் பிடித்தம் செய்யலாம் என்பதை எழுதிக் கொடுக்கலாம்.

* இந்த உத்தரவு, அனைத்து உள்ளாட்சிகள், பல்கலைக்கழகங்கள், வாரியங்கள், கழகங்கள், உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு மானியம் பெறும் இதர நிறுவனங்களின் ஊழியர்கள் அனைவருக்கும் பொருந்தும்.

* இந்த நன்கொடை என்பது, முற்றிலும் தானாக விரும்பி வந்து கொடுக்கின்றனர் என்பதை, சம்பள கணக்கு அதிகாரி உறுதி செய்ய வேண்டும். 


இவ்வாறு, உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்