தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

15.8.11

கடைசி நேரத்தில் பள்ளிகளுக்கு கொடி ஏற்றும் நேரம் மாற்றம்

சுதந்திர தினவிழாவை ஒட்டி, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வகையான பள்ளிகளிலும், அரசு அலுவலகங்களிலும் 9.30 மணிக்கு கொடி ஏற்ற வேண்டும் என கடைசி நேரத்தில் உத்தரவிடப்பட்ட தால், பள்ளி நிர்வாகத்தினர் தர்ம சங்கட நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். 

ஆண்டுதோரும் சுதந்திர தினவிழாவை ஒட்டி அனைத்து வகையான அரசுப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள், அரசு அலுவலகங்களில் காலை 8 மணி முதல் 8.30 மணிக்குள், தேசியக் கொடி ஏற்றி வைப்பது வழக்கம்.
மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் தேசியக் கொடியை முக்கிய விருந்தினர் ஒருவர் தான் ஏற்றி வைப்பது உண்டு. கடந்த ஆண்டை போல, காலை 8 மணி முதல் 8.30 மணிக்குள் தேசியக் கொடியை ஏற்றி வைக்கும் நேரத்தை அந்தந்த முக்கிய பிரமுகர்களிடம், பள்ளிகள் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்து விட்டது.

இந்நிலையில், சென்னை ஜார்ஜ் கோட்டையில் இன்று காலை 9.30 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா கொடி ஏற்றி வைக்கிறார் என, அரசின் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது. கோட்டையில் கொடி ஏற்றும் அதே நேரத்தில் தான், மாநிலத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் கொடி ஏற்ற வேண்டும் என்ற உத்தரவு நேற்று முன்தினம் இரவில் தான், பள்ளிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால், ஏற்கனவே முக்கிய விருந்தினர்களுக்கு, 8 மணிக்கு கொடி ஏற்றும் நேரமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அவர்களை ஒரு மணிநேரம் தாமதமாக வரும்படி பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் தகவல் தெரிவிக்க வேண்டிய தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

நன்றி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்