தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

31.8.11

ஆசிரியர் பதவி உயர்வு தாமதம் ஓய்வு பெறும் போது பாதிப்பு

ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், பணி ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பென்ஷன், பணப்பலன்கள் பெறுவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

பள்ளி கல்வித்துறை சார்பில், ஆசிரியர்கள் பணி மாறுதலுக்கான கலந்தாய்வு நடத்துவது குறித்து, இது வரை எந்த அறிவிப்பும் இல்லை. ஜூனில் பொது கலந்தாய்வு நடத்தி, காலியிடங்களை கணக்கிட்டு, ஜூலையில் பதவி உயர்வு வழங்கப்படும். 

தற்போது கலந்தாய்வு நடத்தாமல், பணியிட மாறுதல் வழங்கப்படுகிறது. பதவி உயர்வு குறித்தும் எந்த முடிவும் எடுக்காத நிலை உள்ளது. இதனால், ஜூலைக்குப்பின் பணி ஓய்வு நிலையில் இருக்கும் ஆசிரியர்களுக்கு, பதவி உயர்வு மூலம் கிடைக்கும் சம்பள உயர்வு , பென்ஷன், பணப்பலன்கள் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. 

பலர் பணி மூப்பு பட்டியல் பெற்றும், பதவி உயர்வு வழங்காத நிலையில் தவிக்கின்றனர்.

நன்றி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்