தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

21.8.11

காலாண்டு விடுமுறை நாட்கள் குறைப்பு

பள்ளிகள் திறக்க காலதாமதம், பாடங்கள் நடத்தாமை போன்ற காரணங்களால், காலாண்டு தேர்வு விடுமுறை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளன. 

தமிழகத்தில், சமச்சீர் கல்வி முறை குறித்த சர்ச்சையால், பள்ளிகள் திறப்பதில் கால தாமதம் ஏற்பட்டது. இதுகுறித்த வழக்கு, ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் என மாறி மாறி சென்றதால், இறுதி தீர்ப்பு வரும் வரை, மாணவர்களுக்கு பாடம் எதுவும் நடத்தவில்லை. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பிற்கு பின், கடந்த சில நாட்களாக பாடங்கள் நடந்து, செப்., 22ம் தேதி, காலாண்டு தேர்வு துவங்கவுள்ளது. 

வழக்கமாக செப்., 25க்குள் காலாண்டு தேர்வு முடிந்து, ஒரு வாரத்திற்கு மேல், காலாண்டு விடுமுறை அளிக்கப்படும். தற்போது செப்., 29 வரை தேர்வு உள்ளதால், செப்., 30, அக்., 1 மற்றும் 2 ஆகிய, மூன்று நாட்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

அக்., 3 முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என, கல்வித்துறை அதிகாரி தெரிவித்தார்.

நன்றி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்