தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

17.8.11

காலாண்டுத் தேர்வு: பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்

சமச்சீர் பாடத்திட்டத்தின் கீழ் காலாண்டுத் தேர்வு நடத்துவது தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுரை வழங்கியுள்ளது. செப்டம்பர் 2-வது வாரம் முடிய, ஒரு மாதத்துக்குள் முடிக்கப்படும் பாடங்களை வைத்து காலாண்டுத் தேர்வை நடத்த வேண்டும் என்று முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

வழக்கமாக காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 2-வது வாரத்தில் நடைபெறும். இந்த ஆண்டு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 15-க்குப் பிறகே புத்தகங்கள் வழங்கப்படுகிறது. எனவே, காலாண்டுத் தேர்வு தள்ளிப்போக வாயப்புள்ளதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், நடத்தப்படும் பாடங்களை வைத்தே தேர்வுகளை நடத்த பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்