தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

11.9.12

சாரண இயக்க பதவிகள் தேர்தல் எப்போது?

"தமிழ்நாடு பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் முக்கிய பதவிகளுக்கு, விரைவில் தேர்தல் நடத்தப்படும்" என, செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சமீபத்தில், சென்னையில் நடைபெற்ற சாரணர் இயக்க செயற்குழுவில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தமிழ்நாடு பாரத சாரண, சாரணியர் இயக்க மாநில தலைவர் பதவி மற்றும் முதன்மை ஆணையர் பதவி, காலியாக உள்ளது. எனவே, அப்பதவிக்கு, விரைவில் தமிழக அரசின் அனுமதி பெற்று, டில்லி தேசிய விதிகளின் படி தேர்தல் நடத்தப்படும்.

முன்னாள் ஆளுநர் இருந்த போது, ராஜபுரஷ்கார் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக, இரண்டு முறை தேதி ஒதுக்கப்பட்டு, அலுவலக நிர்வாக காரணங்களால், விழா ரத்து செய்யப்பட்டது. இதனால், 2009ம் ஆண்டு முதல், தமிழகத்தில் மாநில விருதுக்கு தேர்வு பெற்ற சாரண, சாரணியர்களுக்கு, விருது வழங்கப்படவில்லை. அவர்களுக்கு வழங்கப்பட்ட, தற்காலிக சான்றிதழை கொண்டு, மாணவர்கள் ஜனாதிபதி விருதுக்கு விண்ணப்பிக்க முடியும்.

ராஜ்பவனில் நடத்தப்படும் ராஜபுரஷ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சிக்காக, தமிழக முதல்வரிடம் தேதி கேட்கப்பட்டுள்ளது. அவ்விழா விரைவில் நடத்தப்படும்.

நன்றி:


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்