தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

18.9.12

டி.இ.ஓ.,க்கள் 29 பேருக்கு பதவி உயர்வு: 8 பேர் அதிரடி மாற்றம்

பள்ளிக் கல்வித் துறையில், 29 மாவட்டக் கல்வி அலுவலர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு செய்யப்பட்டனர்.

எட்டு முதன்மைக் கல்வி அலுவலர்கள், பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இவர்கள் இல்லாமல், காஞ்சிபுரம், நாமக்கல், நாகை, தேனி உள்ளிட்ட எட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தேனி சி.இ.ஓ., ரவிச்சந்திரன், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட துணை இயக்குனர் பணியிடத்தில் நியமிக்கப்பட்டார்.

மேலும், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் 29 பேரை, மாவட்டக் கல்வி அலுவலர்களாக (பொறுப்பு) நியமித்தும், பள்ளிக் கல்வி இயக்குனர் தேவராஜன் உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்