தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

30.12.11

குமரி மாவட்ட தஇஆச நிர்வாகிகள் முதன்மைக் கல்வி அலுவலருடன் சந்திப்பு


கன்னியாகுமரி மாவட்ட தஇஆச நிர்வாகிகள் முதன்மைக் கல்வி அலுவலரைச் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களின்  பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு முதன்மைக் கல்வி அலுவலரிடம் வழங்கப்பட்டது.

கோரிக்கைகள்:
  • 1990, 1991, 1992ஆண்டுகளில் ஓப்பந்த அடிப்படையில் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்களை அரசாணை 336ன்படி தொகுப்பூதியத்தில் பணியாற்றிய காலத்தையும் கணக்கில் கொண்டு பணிவரன்முறை, தகுதிகாண் பருவம், தேர்வுநிலை சிறப்புநிலை போன்றவற்றில் உரிய திருத்தம் செய்து நியமன நாள் முதல் காலமுறை ஊதியம் வழங்க வேண்டுகிறோம்.
  • ஆசிரியர்களின் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை பெறுவதில் உள்ள இடர்பாடுகளினால் தேர்வுநிலை சிறப்பு நிலை போன்ற கருத்துருக்கள் மீது உரிய ஆணை வழங்காமல் உள்ளது. பல்கலைக்கழகங்களில் நடத்தப்படுகின்ற பட்டங்களுக்கு உண்மைத்தன்மை அறியப்பட்டு பணிபதிவேட்டில் பதிவு செய்யப்படுகிறது. 10 மற்றும் 12ம் வகுப்பு சான்றிதழ்களின் உண்மைத்தன்மை அறிவதில் அரசு தேர்வுத்துறையால் காலதாமதம் ஏற்படுகிறது. இது பொருள் குறித்து தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் (மேல்நிலைக் கல்வி), சென்னை – 6 அவர்களின் செயல்முறைகள் (ந. க. எண். 91662/டபிள்யு2/இ2/2010 நாள். 29.9.2010) மற்றும் தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர், சென்னை – 6 அவர்களின் செயல்முறைகள் (ந. க. எண். 60039/சி5/சி19/2004 நாள். 05.11.2004)-இன் படி தேர்வுநிலை சிறப்பு நிலை போன்ற கருத்துருக்கள் மீது உரிய ஆணை வழங்க வேண்டுகிறோம்.
  • அரசு பள்ளி ஆசிரியர்களைப் போன்றே அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கும் கூட்டு அமர்வின் மூலம் பணிவரன்முறை தகுதிகாண் பருவம், தேர்வு நிலை சிறப்பு நிலை போன்ற கருத்துருக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
  • கல்வி உரிமைச் சட்டம் – 2009இன் படி 6,7மற்றும் 8 வகுப்புகளுக்கு ஒவ்வொரு 35 மாணவர்களுக்கும் ஓர் ஆசிரியர் என்ற அடிப்படையில் மாணவர் எண்ணிக்கை 35க்கு அதிகமாகும் போது இரண்டாவது ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர் பணியிட நிர்ணயத்தின் போது கல்வி உரிமைச் சட்டம் – 2009இன் அடிப்படையில் ஆசிரியர் பணியிட நிர்ணயம் செய்யப்படாமையால் இடைநிலை ஆசிரியர் பணியிடம் உபரி பணியிடமாக மாற்றப்பட்டுள்ளது. இது பொருள் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
  • அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் மாதம்தோறும் குறுவள மையங்களில் நடைபெறும் பயிற்சிகளில் கலந்துகொள்ள இயலாத ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் மறு பயிற்சியை அந்தந்த வட்டார வள மையங்களில் நடத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்